அகநானூறு - 268. குறிஞ்சி
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய |
5 |
காமம் கலந்த காதல் உண்டுஎனின், நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், யான் அலது இல்லை, இவ் உலகத்தானே இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, |
10 |
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, செய்து பின் இரங்கா வினையொடு மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! |
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 266 | 267 | 268 | 269 | 270 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - குறை, பின், பெரும், தோழி