அகநானூறு - 267. பாலை
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி, இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, |
5 |
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை, மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர, மை பட்டன்ன மா முக முசுவினம் பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென |
10 |
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய், உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் தாம் பழி உடையர்அல்லர்; நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை |
15 |
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த, தோளே தோழி! தவறு உடையவ்வே! |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 265 | 266 | 267 | 268 | 269 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வினை, பாலை