அகநானூறு - 264. முல்லை
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, குழை அமல் முசுண்டை வாலிய மலர, வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் பெரிய சூடிய கவர் கோல் கோவலர், எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, |
5 |
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து, ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக, பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி, கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் |
10 |
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக் காய் சின யானை கங்குல் சூழ, அஞ்சுவர இறுத்த தானை வெஞ் சின வேந்தன் பாசறையோரே? |
15 |
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 262 | 263 | 264 | 265 | 266 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிலை, சிறந்து, நீர்