அகநானூறு - 262. குறிஞ்சி
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, |
5 |
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள், மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் |
10 |
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் |
15 |
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் கொண்டல் மா மலை நாறி, அம் தீம் கிளவி வந்தமாறே. |
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 260 | 261 | 262 | 263 | 264 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மலிந்து