அகநானூறு - 249. பாலை
அம்ம வாழி, தோழி! பல் நாள் இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
5 |
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
10 |
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
15 |
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, உழை மான் இன நிரை ஓடும் கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 247 | 248 | 249 | 250 | 251 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வேறு, எழில்