அகநானூறு - 243. பாலை
அவரை ஆய் மலர் உதிர, துவரின வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு |
5 |
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! 'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப் பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை |
10 |
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது நமக்கே எவ்வம் ஆகின்று; அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! |
15 |
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்கு, தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 241 | 242 | 243 | 244 | 245 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -