அகநானூறு - 224. முல்லை
செல்க, பாக! எல்லின்று பொழுதே வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, |
5 |
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், |
10 |
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, |
15 |
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் அருங் கடி வியல் நகர் நோக்கி, வருந்துமால், அளியள் திருந்திழைதானே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 222 | 223 | 224 | 225 | 226 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, கால்