அகநானூறு - 192. குறிஞ்சி
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின் எய்யா வரி வில் அன்ன பைந் தார், செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, |
5 |
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல் வளை சிறை வாரணம் கிளையொடு கவர, ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள் நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை மை படு விடரகம் துழைஇ, ஒய்யென |
10 |
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின், இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல் உரும் இறை கொண்ட உயர்சிமைப் பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே. |
15 |
தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது. -பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 190 | 191 | 192 | 193 | 194 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரு