அகநானூறு - 19. பாலை
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
5 |
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் சேயிதழ் அனைய ஆகி, குவளை |
10 |
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் வெய்ய உகுதர, வெரீஇ, பையென, சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
15 |
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, இயங்காது வதிந்த நம் காதலி உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருள்