அகநானூறு - 180. நெய்தல்
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, வீ ததை கானல் வண்டல் அயர, கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
5 |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
10 |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் பொன் நேர் நுண் தாது நோக்கி, என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
15 |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 178 | 179 | 180 | 181 | 182 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நோக்கி, தோழி