அகநானூறு - 18. குறிஞ்சி
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, மராஅ யானை மதம் தப ஒற்றி, உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் |
5 |
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் |
10 |
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், |
15 |
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய் ஓம்பினள் எடுத்த, தட மென் தோள |
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பகல், தோழி, நாள், உயர்