அகநானூறு - 177. பாலை
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப் பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
5 |
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
10 |
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், வல்லே வருவர்போலும் வெண் வேல் இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
15 |
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த அணங்குடை வன முலைத் தாஅய நின் சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
20 |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 175 | 176 | 177 | 178 | 179 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கால்