அகநானூறு - 172. குறிஞ்சி
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
5 |
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
10 |
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் |
15 |
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் மணி ஏர் மாண் நலம் சிதைய, பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 170 | 171 | 172 | 173 | 174 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -