அகநானூறு - 171. பாலை
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த பணை எழில் அழிய வாடும்; நாளும் நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது இனையல் வாழி, தோழி! புணர்வர் |
5 |
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை |
10 |
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, கருங் கோட்டு இருப்பை ஊரும் பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! |
15 |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 169 | 170 | 171 | 172 | 173 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி