அகநானூறு - 163. பாலை
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், எமியம் ஆக, துனி உளம் கூர, சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி |
5 |
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை முளரி கரியும் முன்பனிப் பானாள், குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! எனக்கே வந்தனை போறி! புனற் கால் |
10 |
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது இனையை ஆகிச் செல்மதி; வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே! |
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 161 | 162 | 163 | 164 | 165 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -