அகநானூறு - 150. நெய்தல்
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; 'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, |
5 |
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, மாலை மணி இதழ் கூம்ப, காலைக் |
10 |
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; 'வாரார்கொல்?' எனப் பருவரும் தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! |
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 148 | 149 | 150 | 151 | 152 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, பெருந், எனப்