அகநானூறு - 148. குறிஞ்சி
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
5 |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, காணிய செல்லாக் கூகை நாணி, கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
10 |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் மாலை, வருதல் வேண்டும் சோலை முளை மேய் பெருங் களிறு வழங்கும் மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 146 | 147 | 148 | 149 | 150 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பகல், கடும், சிறு