அகநானூறு - 144. முல்லை
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன; அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், |
5 |
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச் சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, துனி தீர் முயக்கம் பெற்றோள் போல |
10 |
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறை, போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, |
15 |
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி வான மீனின் வயின் வயின் இமைப்ப, அமர் ஓர்த்து, அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. |
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 142 | 143 | 144 | 145 | 146 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வயின், எழுந்து, முல்லை