அகநானூறு - 140. நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, என்றூழ் விடர குன்றம் போகும் கதழ் கோல் உமணர் காதல் மடமகள் |
5 |
சில் கோல் எல் வளை தௌர்ப்ப வீசி, 'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் சேரி விலைமாறு கூறலின், மனைய விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, |
10 |
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர வாங்கும் தந்தை கை பூண் பகட்டின் வருந்தி, வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. |
15 |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 138 | 139 | 140 | 141 | 142 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கோல், வெண்