அகநானூறு - 138. குறிஞ்சி
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! குவளை உண்கண் தெண் பனி மல்க, வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
5 |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
10 |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ? நீடு நின்னொடு தௌத்த நல் மலை நாடன் குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
15 |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி நல் நிறம் மருளும் அரு விடர் இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
20 |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 136 | 137 | 138 | 139 | 140 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வரல்