அகநானூறு - 134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம் கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, செம் புற மூதாய் பரத்தலின், நன் பல முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
5 |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
10 |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை கடுமான் தேர் ஒலி கேட்பின், நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 132 | 133 | 134 | 135 | 136 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, முல்லை