அகநானூறு - 116. மருதம்
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! 5 பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் |
5 |
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல், மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, |
10 |
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து அலர் ஆகின்றால் தானே; மலர்தார், மை அணி யானை, மறப் போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடற் பறந்தலை, உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் |
15 |
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் ஓடுபுறம் கண்ட ஞான்றை, ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே. |
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -