அகநானூறு - 115. பாலை
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் |
5 |
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் |
10 |
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, |
15 |
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, நம் நீத்து உறையும் பொருட்பிணிக் கூடாமையின், நீடியோரே. |
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அஞ்சுவரு