அகநானூறு - 108. குறிஞ்சி
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் வரைமுதல் சிதறிய வை போல், யானைப் புகர் முகம் பொருத புது நீர் ஆலி பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
5 |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, படு மழை பொழிந்த பானாட் கங்குல், ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
10 |
அருளான் வாழி, தோழி! அல்கல் விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், காயா மென் சினை தோய நீடிப் பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
15 |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி கை ஆடு வட்டின் தோன்றும் மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, போல்