முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவாய் மொழி இரண்டாம் பத்து
2901 |
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய், ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால், நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல், நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. |
1.1 |
2902 |
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே, சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால், ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான், தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. |
1.2 |
2903 |
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல், நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால் தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த, யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. |
1.3 |
2904 |
கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல், சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய், அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ, உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. |
1.4 |
2905 |
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு, தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற, வாழியவானமே, நீயும fமதுசூதன், பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. |
1.5 |
2906 |
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள், மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால், ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார், மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. |
1.6 |
2907 |
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம் ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே, வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி, மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. |
1.7 |
2908 |
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய், மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால், உருளும்சகடம் உதைத்தபெருமானார், அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. |
1.8 |
2909 |
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த, நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய், செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான், அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. |
1.9 |
2910 |
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த, ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய், மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த, மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. |
1.10 |
2911 |
சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே, ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன், ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும், சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. |
1.11 |
2912 |
திண்ணன்வீடு முதல்முழுதுமாய், எண்ணின்மீதிய னெம்பெருமான், மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நங்f கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. |
2.1 |
2913 |
ஏபாவம்,பரமே, யேழுலகும், ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார், மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய், கோபாலகோளரி யேறன்றியே. |
2.2 |
2914 |
ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை, வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து, மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட, மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. |
2.3 |
2915 |
தேவுமெப் பொருளும்படைக்க, பூவில்நான் முகனைப்படைத்த, தேவனெம் பெருமானுக்கல்லால், பூவும்பூசனையும் தகுமே. |
2.4 |
2916 |
தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே, மிகும்தேவு மெப்பொருளும்படைக்க, தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான், மிகும்சோதி மேலறிவார்யவரே. |
2.5 |
2917 |
யவரும்யாவையு மெல்லாப்பொருளும், கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற, பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி, அவரெம் ஆழியம் பள்ளியாரே. |
2.6 |
2918 |
பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும், வள்ளல் வல்வயிற்றுப்பெருமான், உள்ளுளா ரறிவார் அவன்றன், கள்ளமாய மனக்கருத்தே. |
2.7 |
2919 |
கருத்தில்தேவு மெல்லாப்பொருளும், வருத்தித்தமாயப் பிரானையன்றி, ஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே. |
2.8 |
2920 |
காக்குமியல்வினன் கண்ணபெருமான், சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே, வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர், ஆக்கினான் தெய்வவுலகுகளே. |
2.9 |
2921 |
கள்வா எம்மையு மேழுலகும், நின் னுள்ளேதோற்றிய இறைவா. என்று, வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர், புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. |
2.10 |
2922 |
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக் கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல், வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன், ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. |
2.11 |
2923 |
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று, வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான், தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம், தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. |
3.1 |
2924 |
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய, ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த, அத்தா, நீசெய்தன அடியேனறியேனே. |
3.2 |
2925 |
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து, அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால், அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று, அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. |
3.3 |
2926 |
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு, எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே, எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய், எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. |
3.4 |
2927 |
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய், கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே, தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய், நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. |
3.5 |
2928 |
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை, தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை, சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக் கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே. |
3.6 |
2929 |
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே, பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே, கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா, நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. |
3.7 |
2930 |
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும், கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான், உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின், நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. |
3.8 |
2931 |
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான், படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர், செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி, அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. |
3.9 |
2932 |
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று, ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ, துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி, அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. |
3.10 |
2933 |
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை, குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த, குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி, குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. |
3.11 |
2934 |
ஆடியாடி யகம்கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடு மிவ்வாணுதலெ. |
4.1 |
2935 |
வாணுதலிம்மடவரல், உம்மைக் காணுமாசையுள் நைகின்றாள், விறல் வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக் காண நீரிரக்கமிலீரே. |
4.2 |
2936 |
இரக்கமனத்தோ டெரியணை, அரக்குமெழுகு மொக்குமிவள், இரக்கமெழி ரிதற்கென்செய்கேன், அரக்கனிலங்கை செற்றீருக்கே. |
4.3 |
2937 |
இலங்கைசெற்றவனே, என்னும், பின்னும் வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும், உள்ளம் மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக் கலங்கிக்கைதொழும் நின்றிவளே. |
4.4 |
2938 |
இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு திவளும்தண்ணந் துழாய்கொடீர், என தவளவண்ணர் தகவுகளே. |
4.5 |
2939 |
தகவுடையவனே யென்னும், பின்னும் மிகவிரும்பும்பிரான் என்னும், என தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே. |
4.6 |
2940 |
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும் வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என் கள்விதான்பட்ட வஞ்சனையே. |
4.7 |
2941 |
வஞ்சனே, என்னும் கைதொழும், தன் நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல் கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத் தஞ்சமென்றிவள் பட்டனவே. |
4.8 |
2942 |
பட்டபோதெழு போதறியாள், விரை மட்டலர்தண்துழாய் என்னும், சுடர் வட்டவாய்நுதி நேமியீர், நும திட்டமென்கொ லிவ்வேழைக்கே. |
4.9 |
2943 |
ஏழைபேதை யிராப்பகல், தன கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர் வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள் மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. |
4.10 |
2944 |
வாட்டமில்புகழ் வாமனனை, இசை கூட்டிவண்சடகோபன் சொல், அமை பாட்டோ ராயிரத்திப் பத்தால், அடி குட்டலாகு மந்தாமமே. |
4.11 |
2945 |
அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு, அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள, செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம், செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. |
5.1 |
2946 |
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம், திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ், ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ, ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. |
5.2 |
2947 |
என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம், மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம், மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள, தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. |
5.3 |
2948 |
எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும், அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம், எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும், அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. |
5.4 |
2949 |
ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த, காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு, நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம், பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. |
5.5 |
2950 |
பலபலவேயாபரணம் பேரும்பலபலவே, பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில், பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம், பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. |
5.6 |
2951 |
பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும், காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும், தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும், பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே. |
5.7 |
2952 |
பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள், தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை, என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை, சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. |
5.8 |
2953 |
சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை, எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை, நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய், அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே. |
5.9 |
2954 |
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன், காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன், பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம், கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. |
5.10 |
2955 |
கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை, கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன், கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும், கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. |
5.11 |
2956 |
வைகுந்தாமணிவண்ணனே, என்பொல்லாத்திருக்குறளா, என்னுள்மன்னி, வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே, செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள் செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. |
6.1 |
2957 |
சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள் ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின், மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமாய், எங்கும் பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே. |
6.2 |
2958 |
தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப் பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை, நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட, நாவலர் பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே. |
6.3 |
2959 |
வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து, தெள்கல்தந்த எந்தாய் உ<ன்னையெங்ஙனம்விடுகேன், வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. |
6.4 |
2960 |
உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன் தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ, ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை, சிந்தைசெய்தவெந்தாய் உ<ன்னைச்சிந்தைசெய்துசெய்தே. |
6.5 |
2961 |
உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன் முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான், உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என் முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?. |
6.6 |
2962 |
முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்,உகந்துவந் தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி, செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும், விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே. |
6.7 |
2963 |
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன், பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன் றேறிவீற்றிருந்தாய் உ<ன்னை யென்னுள்நீக்கேலெந்தாய். |
6.8 |
2964 |
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய், மராமரம் பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா, கொந்தார்தண்ணந்துழாயினாய், அமுதே,உன்னையென்னுள்ளேகுழைத்தவெf மைந்தா, வானேறே, இனியெங்குப்போகின்றதே? |
6.9 |
2965 |
போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி ராகின்றாய் உ<ன்னைநானடைந்தேன்விடுவேனோ, பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. |
6.10 |
2966 |
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன, எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும், பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. |
6.11 |
2967 |
கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும், மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா, ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே. |
7.1 |
2968 |
நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன், காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை, சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று, வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. |
7.2 |
2969 |
மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது, யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து, தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம், கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. |
7.3 |
2970 |
கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி, என்னைக்கொண் டென் பாவந்தன்னையும்பாறக்கைத் தெமரேழெழுபிறப்பும், மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. |
7.4 |
2971 |
விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள், விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு, விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி, விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. |
7.5 |
2972 |
மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி, துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும், எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய, விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. |
7.6 |
2973 |
திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய் உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று, உள்ளிப் பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே, மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. |
7.7 |
2974 |
வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன் காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து, தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க, என்னைத் தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. |
7.8 |
2975 |
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய் வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து, மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல் இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. |
7.9 |
2976 |
இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம், முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று, தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து, மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. |
7.10 |
2977 |
பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன், எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல் வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. |
7.11 |
2978 |
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை, ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள், தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும், ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. |
7.12 |
2979 |
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை, கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன், பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும், பண்ணில்பன்னிருநாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே. |
7.13 |
2980 |
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம் புணர்வது, இருவரவர்முதலும்தானே, இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம், புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. |
8.1 |
2981 |
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும், நீந்தும்துயரில்லா வீடுமுதலாம், பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த, பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. |
8.2 |
2982 |
புணர்க்குமயனா மழிக்குமரனாம், புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி, புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர், புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. |
8.3 |
2983 |
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி, நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர், அலமந்துவீய வசுரரைச்செற்றான், பலமுந்துசீரில் படிமினோவாதே. |
8.4 |
2984 |
ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும், மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன், மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம், தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. |
8.5 |
2985 |
தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம், சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு, பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை, பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே? |
8.6 |
2986 |
கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக் கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும், தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும் மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. |
8.7 |
2987 |
காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு, ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா, சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும், ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. |
8.8 |
2988 |
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து, இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப, அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என் சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. |
8.9 |
2989 |
சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா, ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும், வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற, கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. |
8.10 |
2990 |
கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை, வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன், பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார், விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. |
8.11 |
2991 |
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின் செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை, கைம்மாதுன்பம் கடிந்தபிரானே, அம்மாவடியென் வேண்டுவதீதே. |
9.1 |
2992 |
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என் மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய், எய்தாநின்கழல் யானெய்த, ஞானக் கைதா காலக்கழிவுசெய்யேலே. |
9.2 |
2993 |
செய்யேல்தீவினையென் றருள்செய்யும், என் கையார்ச்சக்கரக் கண்ணபிரானே, ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல் எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே. |
9.3 |
2994 |
எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று, என் மனக்கேவந் திடைவீடின்றிமன்னி, தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே, எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. |
9.4 |
2995 |
சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம், இறப்பிலெய்துகவெய்தற்க, யானும் பிறப்பில் பல்பிறவிப்பெருமானை, மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. |
9.5 |
2996 |
மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம், மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே, மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும் மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. |
9.6 |
2997 |
வாராயுன் திருப்பாதமலர்க்கீழ், பேராதேயான் வந்தடையும்படி தாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும் ஆராதாய், எனக்கென்றுமெக்காலே. |
9.7 |
2998 |
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற் றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன், மிக்கார்வேத விமலர்விழுங்கும், என் அக்காரக்கனியே, உன்னையானே. |
9.8 |
2999 |
யானேயென்னை அறியகிலாதே, யானேயென்தனதே யென்றிருந்தேன், யானேநீயென் னுடைமையும்நீயே, வானேயேத்து மெம்வானவரேறே. |
9.9 |
3000 |
ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை, நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி, தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை, வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. |
9.10 |
3001 |
விடலில்சக்கரத் தண்ணலை, மேவல் விடலில்வண்குருகூர்ச் சடகோபன்சொல், கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும், கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. |
9.11 |
3002 |
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம், வளரொளிமாயோன் மருவியகோயில், வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை, தளர்விலராகில் சார்வதுசதிரே. |
10.1 |
3003 |
சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது, அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில், மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை, பதியதுவேத்தி யெழுவதுபயனே. |
10.2 |
3004 |
பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே, புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில், மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை, அயன்மலையடைவததுகருமமே. |
10.3 |
3005 |
கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே, பெருமலையெடுத்தான் பீடுறைகோயில், வருமழைதவழும் மாலிருஞ்சோலை, திருமலையதுவே யடைவதுதிறமே. |
10.4 |
3006 |
திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது, அறமுயல் ஆழிப் படையவன்கோயில், மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை, புறமலைசாரப் போவதுகிறியே. |
10.5 |
3007 |
கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே, உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில், மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை, நெறிபட அதுவே நினைவதுநலமே. |
10.6 |
3008 |
நலமெனநினைமின் நரகழுந்தாதே, நிலமுனமிடந்தான் நீடுறைகோயில், மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை, வலமுறையெய்தி மருவுதல்வலமே. |
10.7 |
3009 |
வலம்செய்துவைகல் வலங்கழியாதே, வலம்செய்யும்ஆய மாயவன் கோயில், வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை, வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே. |
10.8 |
3010 |
வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது, அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில், மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை, தொழுக்கருதுவதே துணிவதுசூதே. |
10.9 |
3011 |
சூதென்றுகளவும் சூதும்செய்யாதே, வேதமுன்விரித்தான் விரும்பியகோயில், மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை, போதவிழ்மலையே புகுவதுபொருளே. |
10.10 |
3012 |
பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல், மருளில்வண்குருகூர் வண்சடகோபன், தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து, அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே. |
10.11 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - மாலிருஞ்சோலை, என்னும், கண்பாதம்கைகமலம், பின்னும், ஆமோதரமறிய, செந்தாமரைத்தடங்கண், வீடுமுதலாம், யுட்படமற்றெவ்வெவையும், கோயில், மெல்லாவியுள்ளுலர்த்த, செங்கனிவாய்செங்கமலம், கொண்டாள், எங்கும், னிந்திரன்வானவர், உம்மைக், குருகூர்ச்சடகோபன், உள்ளம், எம்மேபோல், மெல்லாப்பொருளும்