முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் »
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
ஐந்தாம் பத்து
முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
433 |
வாக்குத்தூய்மையிலாமையினாலே நாக்குநின்னையல்லால்அறியாது மூர்க்குப்பேசுகின்றானிவனென்று காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர் |
1 |
434 |
சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன் பிழைப்பராகிலும்தம்மடியார்சொல் விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால் உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய் |
2 |
435 |
நன்மைதீமைகளொன்றும்அறியேன் புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப் உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன் வன்மையாவதுஉன்கோயிலில்வாழும் |
3 |
436 |
நெடுமையால்உலகேழுமளந்தாய். குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா அடிமையென்னுமக்கோயின்மையாலே கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை |
4 |
437 |
தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது கோட்டுமண்கொண்டகொள்கையினானே. |
5 |
438 |
கண்ணா. நான்முகனைப்படைத்தானே. உண்ணாநாள்பசியாவதொன்றில்லை எண்ணாநாளும்இருக்கெசுச்சாம நண்ணாநாள் அவைதத்துறுமாகில் |
6 |
439 |
வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம் உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன் |
7 |
440 |
வண்ணமால்வரையேகுடையாக கண்ணனே. கரிகோள்விடுத்தானே. எண்ணுவாரிடரைக்களைவானே. நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும் |
8 |
441 |
நம்பனே. நவின்றேத்தவல்லார்கள் உம்பர்கோனுலகேழும்அளந்தாய் கம்பமாகரிகோள்விடுத்தானே. எம்பிரான். என்னையாளுடைத்தேனே. |
9 |
442 |
காமர்தாதைகருதலர்சிங்கம் வாமனன்என்மரகதவண்ணன் சேமநன்கமரும்புதுவையர்கோன் நாமமென்றுநவின்றுரைப்பார்கள் |
10 |
இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல். )
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல். )
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
443 |
நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. |
1 |
444 |
சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார் முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன் பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. |
2 |
445 |
வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. |
3 |
446 |
மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. |
4 |
447 |
மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. |
5 |
448 |
உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. |
6 |
449 |
கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. |
7 |
450 |
ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. |
8 |
451 |
உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். |
9 |
452 |
அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. |
10 |
மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
453 |
துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ? மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
1 |
454 |
வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். |
2 |
455 |
உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன் தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய் புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். |
3 |
456 |
காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன் பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
4 |
457 |
காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல் மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன் சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். |
5 |
458 |
எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும் ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத் திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். |
6 |
459 |
அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால் இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய் சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
7 |
460 |
எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய். சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். |
8 |
461 |
அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். |
9 |
462 |
சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள் நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன் ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. |
10 |
நாலாம் திருமொழி - சென்னியோங்கு
(எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)
தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
463 |
சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா. என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? |
1 |
464 |
பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின் பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. |
2 |
465 |
எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே. நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்? நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. |
3 |
466 |
கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல் உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன் கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. |
4 |
467 |
பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன் என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. |
5 |
468 |
உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன் மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ. என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? |
6 |
469 |
பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய் மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. |
7 |
470 |
அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான். நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. |
8 |
471 |
பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ. தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. |
9 |
472 |
தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி. வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. |
10 |
473 |
வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. |
11 |
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - பண்டன்றுபட்டினம்காப்பே, திருமாலிருஞ்சோலையெந்தாய், திருமொழி, விருத்தம், அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய, சென்னியோங்கு, எம்பெருமான், ஆழ்வார்