முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி பத்தாம் பத்து
கலி விருத்தம்
1848 |
ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள் வருநல் தொல்கதி யாகிய மைந்தனை நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய் கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே |
1.1 |
1849 |
பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர் மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய் என்னை யாளுடை யீசனை யெம்பிரான் றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே |
1.2 |
1850 |
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே |
1.3 |
1851 |
துளக்க மில்சுட ரை,அவு ணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய் அளப்பி லாரமு தையம ரர்க்கருள் விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே |
1.4 |
1852 |
சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர் நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என் உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண் விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே |
1.5 |
1853 |
வானை ஆரமு தம்தந்த வள்ளலை தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய் ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம் கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே |
1.6 |
1854 |
கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய் மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய் பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய வேந்த னைச்சென்று காண்டும்வெ காவுளே |
1.7 |
1855 |
பத்த ராவியைப் பான்மதி யை,அணித் தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய் முத்தி னைமணி யைமணி மாணிக்க வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே |
1.8 |
1856 |
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர் கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய் நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே |
1.9 |
1857 |
பெற்றம் ஆளியை பேரில் மணாளனை கற்ற _ல்கலி கன்றி யுரைசெய்த சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே |
1.10 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1858 |
இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை காணீர் பரக்க யாமின் றுரைத்தென் இரவணன் குரக்கு நாயகர் காள்.இளங் கோவே அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் |
2.1 |
1859 |
பத்து நீள்முடி யுமவற் றிரட்டிப் சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான் ஒத்த தோளிரண் டுமொரு முடியும் அத்த. எம்பெரு மான்.எம்மைக் கொல்லேல் |
2.2 |
1860 |
தண்ட காரணி யம்புகுந் தன்று கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர் பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப் அண்ட வணர் உகப்பதே செய்தாய் |
2.3 |
1861 |
எஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன் நஞ்சு தானரக் கர்குடிக் கென்று விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் அஞ்சி லோதியைக் கொண்டு நடமின் |
2.4 |
1862 |
செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் வம்பு லாம்கடி காவில் சிறையா காணீர் கும்ப னோடு நிகும்பனும் பட்டான் அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது |
2.5 |
1863 |
ஓத மாகட லைக்கடந் தேறி காதல் மக்களும் சுற்றமுங் கொன்று எரித்துத் தூது வந்த குரங்குக்கே உங்கள் ஆதர் நின்று படுகின்ற தந்தோ. |
2.6 |
1864 |
தழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று மாழை மான்மட நோக்கியை விட்டு ஏழை யையிலங் கைக்கிறை தன்னை சூழ மாநினை மாமணி வண்ணா. |
2.7 |
1865 |
மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற் |
2.8 |
1866 |
புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் சரங்க ளேகொடி தாயடு கின்ற இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே. குரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல். |
2.9 |
1867 |
அங்கவ் வானவர்க் காகுலம் தீர பொங்கு மாவல வன்கலி கன்றி எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர். தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின் |
2.10 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1868 |
ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம் சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா. உம்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே |
3.1 |
1869 |
எம்பி ரானே. என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான் நம்பி அனுமா. சுக்கி ரீவ. அங்கத னே.நளனே கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே |
3.2 |
1870 |
ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக் கால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல் நீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று கோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே |
3.3 |
1871 |
மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால் கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன் குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே |
3.4 |
1872 |
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக இன்று தம்மி னெங்கள் வாணாள் எம்பெரு மான்தமர்காள் நின்று காணீர் கண்க ளார நீரெமைக் கொல்லாதே குன்று போல ஆடு கின்றோம் குழமணி தூரமே |
3.5 |
1873 |
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா, கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே |
3.6 |
1874 |
மாற்ற மாவ தித்த னையே வம்மின் அரக்கருளீர் சீற்றம் _ம்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல்பி றப்பில் அனுமனை வாழ்கவென்று கூற்ற மன்னார் காண ஆடீர் குழமணி தூரமே |
3.7 |
1875 |
கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம் துவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே |
3.8 |
1876 |
ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார் ஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின் கூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே |
3.9 |
1877 |
வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து அன்றரக்கர் குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே |
3.10 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1878 |
சந்த மலர்க்குழல் தாழத் வந்து,என் முலைத்தடந் தன்னை நந்தன் பெறப்பெற்ற நம்பீ. எந்தை பெருமனே. உண்ணாய் |
4.1 |
1879 |
வங்க மறிகடல் வண்ணா.மாமுகி லேயொக்கும் நம்பீ செங்க ணெடிய திருவே செங்கம லம்புரை வாயா, கொங்கை சுரந்திட வுன்னைக் கூவியும் காணாதி ருந்தேன் எங்கிருந் தாயர்க ளோடும் என்விளை யாடுகின் றாயே |
4.2 |
1880 |
திருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு, உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற, மருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய் |
4.3 |
1881 |
மக்கள் பெறுதவம் போலும் வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் முதல்வா மதக்களி றன்னாய் செக்கர் இளம்பிறை தன்னை வாங்கிநின் கையில் தருவன் ஒக்கலை மேலிருந் தம்மம் உகந்தினி துண்ணநீ வாராய் |
4.4 |
1882 |
மைத்த கருங்குஞ்சி மைந்தா.மாமரு தூடு நடந்தாய், வித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா, இத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா, உத்தம னே.அம்மம் உண்ணாய் உலகளந் தாய்.அம்மம் உண்ணாய் |
4.5 |
1883 |
பிள்ளய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை கள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி உள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற பள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய் |
4.6 |
1884 |
தன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க வன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி நன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா என்மக னே.அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே |
4.7 |
1885 |
உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால் நொந்திட மோதவுங் கில்லேன்_ங்கள்தம் ஆநிரை யெல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போதங்கு நில்லேல்ஆழியங் கையனே. வாராய் |
4.8 |
1886 |
பெற்றத் தலைவனெங் கோமான் பேரரு ளாளன் மதலாய், சுற்றக் குழாத்திளங் கோவே. தோன்றிய தொல்புக ழாளா, கற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே எற்றுக்கென் அம்மமுண் ணாதே எம்பெரு மானிருந் தாயே |
4.9 |
1887 |
இம்மை யிடர்க்கெட வேண்டி ஏந்தெழில் தோள்கலி கன்றி செம்மைப் பனுவல்_ல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை அம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும் மெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே |
4.10 |
கலித்தாழிசை
1888 |
பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண, ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே. சப்பாணி ஒளிமணி வண்ணனே. சப்பாணி . |
5.1 |
1889 |
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண் டேயெம் பிராக்கள் இருநிலத் தெங்கள்தம் ஆயர் அழக அடிகள் அரவிந்த வாயவ னே. கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. |
5.2 |
1890 |
தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால் தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த தாமோ தரா. கொட்டாய் சப்பாணி தமரைக் கண்ணனே. சப்பாணி |
5.3 |
1891 |
பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து உற்றா ரொருவரு மின்றி யுலகினில், மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட கற்றாய னே.கொட்டாய் சப்பாணி கார்வண்ண னே.கொட்டாய் சப்பாணி |
5.4 |
1892 |
சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர, பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச் சாற்றியோ ராயிரம் சப்பாணி தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி |
5.5 |
1893 |
கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு நானவல் அப்பம் தருவன் கருவிளைப் பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே, கோவல னே. கொட்டாய் சப்பாணி குடமா டீ.கொட்டாய் சப்பாணி. |
5.6 |
1894 |
புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து, துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை, அள்ளிய கையா லடியேன் முலைநெருடும் பிள்ளைப்பி ரான். கொட்டாய் சப்பாணி பேய்முலை யுண்டானே. சப்பாணி. |
5.7 |
1895 |
யாயும் பிறரும் அறியாத யாமத்து, மாய வலவைப்பெண் வந்து முலைதர, பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட, வாயவ னே.கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. |
5.8 |
1896 |
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை, மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட, வள்ளலே. கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. |
5.9 |
1897 |
காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன், பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த் தாராளா, கொட்டாய் சப்பாணி தடமார்வா கொட்டாய் சப்பாணி. |
5.10 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1898 |
எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? சிங்கா மைவிரித் தவனெம் பெருமான் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.1 |
1899 |
குன்றொன்று மத்தா அரவம் அளவிக் நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.2 |
1900 |
உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள் விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.3 |
1901 |
தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான் பியள்ந்திட் டமரர்க் கருள்செய் துகந்த வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.4 |
1902 |
நீண்டான் குறளாய் நெடுவா னளவும் தீண்டா மைநினைந் திமையோ ரளவும் வேண்டா மைநமன் றமரென் தமரை ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.5 |
1903 |
பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப் ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன் அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.6 |
1904 |
படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள் துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத் மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா அடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.7 |
1905 |
நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன் அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.8 |
1906 |
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத் திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய் வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் |
6.9 |
1907 |
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன் என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி |
6.10 |
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1908 |
மான முடைத்துங்க ளாயர் குலமத ஊன முடையன செய்யப் பெறாயென் நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன் தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் |
7.1 |
1909 |
காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப் மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் மேலை யகத்துநங் காய். வந்து காண்மின்கள் பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் |
7.2 |
1910 |
தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள். உறி வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள் பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும் |
7.3 |
1911 |
மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை |
7.4 |
1912 |
தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய். |
7.5 |
1913 |
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய். |
7.6 |
1914 |
ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் பாசனம் நல்லன பண்டிக ளால்புகப் போயிருந் தங்கொரு பூத வடிவுகொண் மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி |
7.7 |
1915 |
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர் ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற் சோத்தம் பிரான். இவை செய்யப் பெறாய். என் பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப் |
7.8 |
1916 |
ஈடும் வலியும் உடையவிந் நம்பி ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி சேடன் திருமறு மார்வன் கிடந்து ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை |
7.9 |
1917 |
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள். பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ . |
7.10 |
1918 |
அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ. பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர மங்கைநல் லீர்.வந்து கொண்மின் என்றுமரம் |
7.11 |
1919 |
அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக் உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக் பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு |
7.12 |
1920 |
தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி எம்பெரு மான். உன்னைப் பெற்ற வயிறுடை அம்பர மேழும் அதிரும் இடிகுரல் வம்பவிழ் கானத்து மால்விடை யோடு |
7.13 |
1921 |
அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் |
7.14 |
கலிவிருத்தம்
1922 |
காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து, தாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து, போது மறுத்துப் புறமேவந் துநின்றீர், ஏதுக்கிது என்னிது என்னிது என்னோ. |
8.1 |
1923 |
துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி, கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி, சுவரார் கதவின் புறமேவந்து நின்றீர், இவரா ரிதுவென் னிதுவென் னிதுவென்னோ. |
8.2 |
1924 |
கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர், உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர், மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர், இருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ. |
8.3 |
1925 |
நாமம் பலவு முடைநா ரணநம்பீ, தாமத் துளவம் மிகநா றிடுகின்றீர், காம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர், ஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ. |
8.4 |
1926 |
சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து, மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து, முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர், எற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ. |
8.5 |
1927 |
ஆனா யரும்ஆ னிரையுமங் கொழியக், கூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப், போனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர், ஏனோர்கள் முன்னென் னிதுவென் னிதுவென்னோ. |
8.6 |
1928 |
மல்லே பொருத திரள்தோல் மணவாளீர், அல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை, சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர் எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ. |
8.7 |
1929 |
புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர், இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம், தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர், எக்கே. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. |
8.8 |
1930 |
ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க் கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய், தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப, ஏடி. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. |
8.9 |
1931 |
அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை, கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை, சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே |
8.10 |
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1932 |
புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த கள்ளவிழ் கோதை காதலு மெங்கள் பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப் |
9.1 |
1933 |
மன்றில் மலிந்து கூத்துவந் தாடி அன்று நடுங்க ஆனிரை காத்த நின்ற பிரானே. நீள்கடல் வண்ணா. முன்றி லெழுந்த முருங்கையில் தேனா |
9.2 |
1934 |
ஆர்மலி யாழி சங்கொடு பற்றி கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம் நேரிழை மாதை நித்திலத் தொத்தை ஆரெழில் வண்ணா. அங்கையில் வட்டாம் |
9.3 |
1935 |
மல்கிய தோளும் மானுரி யதளும் நல்கிய நலமோ? நரகனை தொலைத்த அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு சொல்லியென் நம்பீ. இவளைநீ யுங்கள் |
9.4 |
1936 |
செருவழி யாத மன்னர்கள் மாளத் அருவழி வானம் அதர்படக் கண்ட திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை பெருவழி நாவற் கனியினு மெளியள் |
9.5 |
1937 |
அரக்கிய ராகம் புல்லென வில்லால் செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம் எருக்கிலைக் காக எறிமழு வோச்சல் |
9.6 |
1938 |
ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச பாழியந் தோளோ ராயிரம் வீழப் மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய். |
9.7 |
1939 |
பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை கருங்கடல் வண்ணா. கவுள்கொண்ட நீராம் |
9.8 |
1940 |
நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் சீர்க்கெழு கோதை யென்னல திலளென் பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட |
9.9 |
1941 |
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி வாட்டிறல் தானை மங்கையர் தலைவன் தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் |
9.10 |
வெண்டுறை
1942 |
திருத்தாய் செம்போத்தே, திருமாமகள் தன்கணவன், மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத் திருத்தாய் செம்போத்தே. |
10.1 |
1943 |
கரையாய் காக்கைப்பிள்ளாய், கருமாமுகில் போல்நிறத்தன், உரையார் தொல்புக ழுத்தம னைவரக், கரையாய் காக்கைப்பிள்ளாய். |
10.2 |
1944 |
கூவாய் பூங்குயிலே, குளிர்மாரி தடுத்துகந்த, மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக், கூவாய் பூங்குயிலே. |
10.3 |
1945 |
கொட்டாய் பல்லிக்குட்டி, குடமாடி யுலகளந்த, மட்டார் பூங்குழல் மாதவ னைவரக், கொட்டாய் பல்லிக்குட்டி. |
10.4 |
1946 |
சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலனுயர்த்த, மல்லார் தோள்வட வேங்கட வன்வர, சொல்லாய் பைங்கிளியே. |
10.5 |
1947 |
கோழி கூவென்னுமால், தோழி. நானென்செய்கேன், ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று கோழி கூவென்னுமால். |
10.6 |
1948 |
காமற் கென்கடவேன், கருமாமுகில் வண்ணற்கல்லால், பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக், காமற் கென்கடவேன். |
10.7 |
1949 |
இங்கே போதுங்கொலோ, இனவேல்நெடுங் கண்களிப்ப, கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால், இங்கே போதுங்கொலோ. |
10.8 |
1950 |
இன்னா ரென்றறியேன், அன்னே. ஆழியொடும், பொன்னார் சார்ங்க முடைய அடிகளை, இன்னா ரென்றறியேன். |
10.9 |
1951 |
தொண்டீர். பாடுமினோ, சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன், ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள், தொண்டீர். பாடுமினோ |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - சப்பாணி, கொட்டாய், பொங்கத்தம், குழமணி, பொங்கோ, அளைவெண்ணெ, யுண்டாப், சியரால், இன்றாய்ச், னிதுவென்னோ, னோம்தடம், னிதுவென், விருத்தம், பெருமான், கின்றோம், டவன்காண்மின், கொண்டு, போலும், ஆசிரிய, புண்டிருந்தவனே, கழிநெடிலடி, நந்தன், என்செய், என்செய்கேன், வாராய், பிரானே, காண்டுமே, கோமான், எம்பெரு, மால்வண்ண, கில்லேன், வல்லார், கில்லா, மக்கள், முலையுண்ட, உண்ணாய், கொங்கை, தீமைகள், மில்லை, நங்காய், பேய்ச்சி, வெல்லாம், மங்கையர், கண்டுபோய், அதுவன், எங்கள், நீள்முடி, புண்டிருந், காணீர், னைவரக், தொல்சீர், றியும்முன், போகாய், முனநாள், துயராய, னேநின்று, தொண்டீர், டவரைத், செய்கேன், ரென்றறியேன், போனேன், குறளாய், போதுங்கொலோ, பாடுமினோ, செய்யப், பணிந்தேத்த, நங்கைகாள், வில்லால், தனக்காக்க, திருமா, விழுங்கி, பிணங்கிநீ, தின்று, திருத்தாய், நினைந்திலை, வந்துமுன், இவளெனக், கருதுகின், பைங்கிளியே, செம்போத்தே, கருமாமுகில், கூவாய், பல்லிக்குட்டி, சொல்லாய், கரையாய், காக்கைப்பிள்ளாய், நெடுங்கடல், ஆண்மைகொ, டணிந்து, என்னிது, மால்விடை, வந்தாய், பின்னை, பூங்குயிலே, நின்றீர், டெழுந்த, நினைந்தோ, தெந்தை, இதுவென், புகுந்தீர், கென்கடவேன், கூவென்னுமால், காண்மின்கள், அம்மமுண், சொல்லி, புன்மை, நின்று, விட்டு, கைக்கிறை, உங்கள், அம்பின், வெங்கதி, சுக்கி, யுங்கள், சோத்தம், அறுசீர்க், கொண்மின், கொல்லேல், எம்மைக், வெண்ணெய், னைச்சென்று, சென்று, பேரில், மைந்தனை, விரும்பிய, தொத்தை, முத்தி, நாங்கள், தோளும், இரவணன், எண்சீர்க், கொம்பு, கொல்லாமே, வாழ்கவென்று, தொல்புக, திருமொழி, யெல்லாம், அடிகள், துண்ணநீ, அம்மம், மனத்துவைத், வண்ணனே, ராயிரம், வெண்ணெயை, அப்பம், ஆய்ச்சியர், தயிர்நெய், தருவன், கையில், வேண்டா, காவலன், இலங்கை, முந்நீர், வென்றி, கல்லின், ஒன்றும், வாங்கிநின், ஓட்டந்து, பாய்ந்திடு, பிள்ளைக, சேமமுண், என்னம்மம், மங்கையர்கோன்