ஞானக்குறள் - 18. பிறப்பறுதல்
தன்னை யறியு மறிவு தனைப்பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. |
171 |
அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து. |
172 |
சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில் பவநாச மாகும் பரிந்து. |
173 |
உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால் பிறப்பின்றி வீடாம் பரம். |
174 |
நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால் அனைத்துலகும் வீடா மது. |
175 |
உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு திடம்படு மீசன் றிறம். |
176 |
தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால் பின்னைப் பிறப்பில்லை வீடு. |
177 |
மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய் இருளின்றி நிற்கு மிடம். |
178 |
விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால் அகாரமாங் கண்டீ ரறிவு. |
179 |
சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால் முந்தியே யாகுமாம் வீடு. |
180 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
18. பிறப்பறுதல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - கண்டால், பிறப்பில்லை, பின்னைப்