நாய் வளர்க்கிறீங்களா..?
பிரதிபலன் எதையும் எதிர் பார்க்காமல் அன்பை கொட்டக் கூடியவை வளர்ப்புப் பிராணிகள்.
அதிலும் குறிப்பாக நாய் வளர்ப்போருக்கு டென்ஷனும், மன உளைச்சலும் குறைவதாகவும், அதன் விளைவாக இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
உங்கள் வளர்ப்புக்காக இங்கே சில குறிப்புகள்....
ஒவ்வொரு முறை உங்கள் நாயைக் குளிப்பாட்டும் போதும், கடைசியாக வினிகர் கலந்த தண்ணீரால் ஒரு முறை அலசி விடுங்கள். ரோமங்களில் இருந்து வீசும் நாற்றத்தை இது தவிர்க்கும்.
உங்கள் செல்லத்தின் உடம்பெல்லாம் பூச்சித் தொல்லையா? வேப்பிலையை அரைத்து அதன் உடம்பில் தடவி, சில மணி நேரம் கழித்துக் குளிப்பாட்டுங்கள்.
குளிர்காலத்தில் நாய்களைக் குளிப்பாட்டலாமா, வேண்டாமா எனப் பலருக்கும் குழப்பம். சோடா பை கார்பை அதன் உடம்பில் தூவித் துடைத்து விடுங்கள். சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கும்.
அக்கம் பக்கத்து வீட்டு நாய்களுடன் போட்ட சண்டையில் உடம்பில் காயங்களுடன் வந்துள்ளதா உங்கள் செல்லம்? அடிபட்ட இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி விடுங்கள்.
ஆரஞ்சுப் பழத் தோலைக் கசக்கி அதை நாயின் உடம் பெல்லாம் தேய்த்து விட்டுப் பிறகு குளிப்பாட்டினாலும், அதன் உடலி லிருந்து பூச்சிகள் எஸ்கேப் ஆகும்.
ஆட்டிறைச்சி கொடுக்கும் போது அத்துடன் வெங்காயமும், பூண்டும் சேர்த்து சமைத்துக் கொடுத்தாலும், பூச்சிகள் வராது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாய் வளர்க்கிறீங்களா..?, உங்கள், உடம்பில், விடுங்கள், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி