விருந்தோம்பல் - வாங்க...வாங்க...!
விருந்தோம்பல் என்பது வெளியில் சிரித்து உள்ளுக்குள் திட்டிக் கொண்டு உபசரிப்பதல்ல!
விருந்தோம்பல்! தமிழர்களின் சிறப்பு குணங்களுள் ஒன்றல்லவா அது? வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் விருந்தினரை உபசரிக்க சொல்லித் தர வேண்டியதில்லை என்றாலும் இன்றைய இளைய தலைமுறையினருக்காக...
விருந்தோம்பல் - சில டிப்ஸ்
வீட்டுக்கு வருபவர்களை இன்முகம் காட்டி வரவேற்றுப் பேசி உபசரியுங்கள்.
அவர்களுக்குப் பிடித்தமான பானம் தயாரித்து கொடுத்து அவர்களுடன் அமர்ந்து, அவர்களின் சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அவர்களுக்குப் பிடித்தமான உணவு சமைத்து, உங்கள் கையால் பரிமாறுங்கள்.
ஒரு வேளை, உங்கள் வீட்டில் அவர் தங்க நேர்ந்தால் வீட்டுப் பிரச்சினைகளான குழந்தைகளை திட்டுவது, அடிப்பது, கணவரை குறை சொல்வது, சண்டை போடுவது ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
விருந்தினரின் குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள். உங்கள் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ளவும்.
விருந்தினர் உங்களுடன் தங்கி இருக்கும் போது உங்கள் பகுதியைச் சுற்றிப் பார்க்க விரும்பினால், யார் செலவு செய்வது என்பதை முன்கூட்டியே பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஒருவரை உபசரிக்க வேண்டும் என்பது உளவியல் ரீதியான விஷயம். இதுகூட யாரும் சொல்லி தெரிந்துக் கொள்வதல்ல. ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு விருந்தோம்பல் பற்றி நல்ல முறையில் சொல்லி வளர்ப்பது அவசியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருந்தோம்பல் - வாங்க...வாங்க...!, உங்கள், விருந்தோம்பல், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி