தங்கத் தாரகை ரூபினா!
வேலூர், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பெரியார் பல்கலைக்கழக பி.ஆர்க் மாணவி ரூபினா மரியம். இவர் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாதிரி கட்டமைப்பு திட்ட அறிக்கை தயாரித்து முன்னாள் ஆளுநர் ராமமோகன்ராவிடம் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
இவரது திட்டத்தில் ரூ.200 கோடியில் "சீரோ எனர்ஜி டெவலப்மெண்ட்" முறையில் பெர்கோலாஸ் வடிவமைப்பைக் கையாண்டு பல்கலைக் கழக கட்டமைப்பு அமைவதற்கான முன்வடிவம் தரப்பட்டுள்ளது.
தந்தை அக்பர்கான் மேல்விஷாரம் அப்துல்ஹக்கீம் கலைக் கல்லூரி பேராசிரியர். தாயார் மொஹ’னாகான். இவர் காட்பாடி ஆக்சீரியம் மகளிர் கல்லூரி பேராசிரியை.
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் பி.ஆர்க் பயின்ற ரூபினா மரியம், இவ்வாண்டு தொடக்கத்தில் படிப்பை நிறைவு செய்துள்ளார்.
வேலூர் கோட்டையில் வாடகைக் கட்டடத்தில் தற்போது திருவள்ளுவர் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகம் அமைவதற்கான இடத்தேர்வு பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில் காட்பாடி-திருவலம் சாலையில் பிரம்மபுரம் பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தார். அந்த இடத்தில் பல்கலைக் கழக வளாகம் அமைவதற்குரிய குறைந்த செலவிலான தரம் வாய்ந்த கட்டமைப்பு மாதிரிகளை தனது திட்ட அறிக்கையில் இடம் பெறச் செய்துள்ளார் ரூபினா.
இதற்காக அவர் நாட்டின் 5 பிரபல பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்றும், இன்டர்நெட் உதவியுடன் 15 பல்கலைக்கழக கட்டமைப்புகளையும் ஆய்வு செய்துள்ளார். வளாகக் கட்டமைப்பு மாதிரியை உருவாக்கும் பொறியாளர்கள் நாட்டில் சொற்ப அளவில்தான் உள்ளனர். இந்நிலையில் கல்லூரி மாணவி ஒருவரின் இத்தகைய முயற்சி அபூர்வமானது என்பதால் பல்கலைக்கழகம் அவருக்கு தங்கப் பதக்கம் அளித்து கௌரவித்துள்ளது.
ரூபினா பல்கலைக் கழகத்தில் பி.ஆர்க் பாடத்தில் முதலிடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தங்கத் தாரகை ரூபினா!, பல்கலைக், ரூபினா, கட்டமைப்பு, செய்துள்ளார், கல்லூரி, ஆர்க், பல்கலைக்கழக, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி