பொடி வதக்கல்
தேவையானவை: கத்திரிக்காய்-100 கிராம், கோவைக்காய்-100 கிராம், அவரைக்காய்-100 கிராம்,காராமணி-50 கிராம், முருங்கைக்காய்-1, உப்பு-தேவையான அளவு.வறுத்துப்பொடிக்க: உளுத்தம்பருப்பு-ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய்-3, சீரகம்-அரை டீஸ்பூன்,உப்பு-கால் டீஸ்பூன்.தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளை நீளவாக்கில் நறுக்குங்கள். நறுக்கிய துண்டுகளை குக்கரில் போட்டு, சிறிதுஉப்பு சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும்.வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில் பச்சை மிளகாயை வெறும் கடாயில் போட்டு, குறைந்த தீயில்வைத்து திருப்பித் திருப்பி விட்டு வதக்குங்கள். நன்கு வறுபட்டுவிடும். நிறம் மாறி வறுபட்டதும்தனியே எடுத்துவையுங்கள். பிறகு, உளுத்தம்பருப்பையும் சீரகத்தையும் தனித்தனியே நன்குவறுக்கவும். பிறகு மூன்றையும் மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளவும். எண்ணெயைக்காயவைத்து, கடுகு தாளித்து, காய்கறிகளை அதில் தண்ணீரை வடித்துவிட்டு சேருங்கள். (வடித்ததண்ணீரை சூப், ரசம் போன்றவற்றில் சேர்க்கலாம்). காய்கறிக் கலவையைக் கிளறி, பொடித்தபொடியைத் தூவி நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொடி வதக்கல், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், கிராம், Recipies, சமையல் செய்முறை