சும்மா குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் - 2, தக்காளி - 2, புளி - சிறு நெல்லிக்காய் அளவு,மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன் (மிளகாய்தூளுக்கு பதில் சாம்பார்தூளும் போடலாம்),தனியாதூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. தாளிக்க:கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை, சோம்பு(விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை 2 கப் தண்ணீர் விட்டுக்கரைத்து, வடிகட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பிறகு,வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி,புளித் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய்தூள், தேவையான உப்பு சேர்த்து, பச்சை வாசனைபோகக் கொதித்தபின், கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள். விருப்பப்பட்டால், 2 பூண்டுப் பல்லைத்தட்டிப் போடலாம். வாசமாக இருக்கும்.செட்டுநாட்டு ஸ்பெஷலான இந்த சும்மா குழம்பு, சூடான இட்லிக்கேற்ற சூப்பரான காம்பினேஷன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சும்மா குழம்பு, 30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, சேர்த்து, டீஸ்பூன், தேவையான, உப்பு, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை