வாழைத்தண்டு மோர் கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒருகப், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒருடீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3,தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டியான மோர் -ஒரு கப். தாளிக்க: தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை,சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.கடலைப்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு,ஊறவைத்த கடலைப்பருப்பு, வறுத்த உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம்..எல்லாவற்றையும் அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலைதாளித்துக் கொட்டி இறக்கவும். பிறகு கெட்டியான மோர் சேர்த்துப் பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைத்தண்டு மோர் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், தேங்காய், Recipies, சமையல் செய்முறை