கருணைக்கிழங்கு குழம்பு

தேவையானவை: கருணைக்கிழங்கு - 3, பூண்டு - 10 பல், சின்ன வெங்காயம் - 10, புளி - எலுமிச்சைஅளவு, உப்பு - தேவைக்கேற்ப, சாம்பார்பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, துவரம்பருப்புவேகவைத்த நீர் மட்டும் - கால் கப்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சோம்பு - கால்டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கருணைக்கிழங்கை தோலுடன், நன்கு கழுவி, குக்கரில் 2 விசில் சத்தம் வரும்வரை வைத்துவேகவைத்துக்கொண்டு நீரை வடித்து விட்டு தோலை உரித்தெடுக்கவும். அதை சற்று கனமான வளையங்களாகநறுக்கவும். பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். புளி + உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் சாம்பார்பொடி + மஞ்சள்தூள் கலக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிதங்களை போட்டு தாளித்து, சிவந்ததும் பூண்டு + வெங்காயம் +கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் அதில் நறுக்கிய கிழங்கையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி, கரைத்த புளி +சாம்பார்பொடி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். குழம்பு கெட்டியாகிஎண்ணெய் மேலே மிதந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சாதத்தில் கொஞ்சமே போட்டுப்பிசறி சாப்பிட்டாலும், சுவையும் மணமும் சுண்டி இழுக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருணைக்கிழங்கு குழம்பு, 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, டீஸ்பூன், சாம்பார்பொடி, புளி, பூண்டு, Recipies, சமையல் செய்முறை