ரசமலாய்
தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - முக்கால் கப், எலுமிச்சம்பழம் - பாதி, நெய் - 1டீஸ்பூன், குங்குமப்பூ - அரை சிட்டிகை, சாரைப் பருப்பு - 2 டீஸ்பூன்.
செய்முறை: பால் ஒன்றரை கப் எடுத்து காய்ச்சி, ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து திரியவிட்டு,பின் நீரை நன்றாக வடித்து விட்டு பனீர் தயாரிக்கவும். அதை நன்கு பிசைந்து, சிறு வட்ட வடிவில்தட்டையாக (வடைபோல்) தட்டவும். பின்னர் அரை கப் சர்க்கரை எடுத்து, அரை கப் நீர் சேர்த்துஇளம்பாகு காய்ச்சி, அடுப்பை அணைக்கவும். தட்டி வைத்திருக்கும் ரசமலாய்களை சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவிடவும். மீதிப்பாலை நன்கு வற்றக் காய்ச்சி, அதில் குங்குமப்பூ சேர்த்துஆறவிடவும்.அரை மணிநேரம் கழித்து, ஜீராவில் ஊறிய ரசமலாய்களை எடுத்து, ஆறிய பாலில் போட்டுஊறவிட்டு, சாரைப்பருப்பை வறுத்து தூவி பரிமாறவும். ‘ஜில்’லென்று சாப்பிட்டால் நன்றாகஇருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரசமலாய், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, காய்ச்சி, எடுத்து, Recipies, சமையல் செய்முறை