புதிய ஆய்வு...
குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தாய்மார்களே காரணமாக இருக்கிறார் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
தாய்மார்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையில், அவர்களுடைய குழந்தைகளுக்கு 5 முதல் 7 வயது வரையிலான பருவத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. ஆனால் இது தெரியாமல் குழந்தைகளை திட்டுவதும், அடிப்பதும் நடக்கின்றன. பொதுவாக மன அழுத்தத்தால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு 1 மடங்கு பாதிப்பு என்றால், அது பெண்களுக்கு 2 மடங்கு சிக்கலை ஏற்படுத்தும். தாயான பிறகு இத்தகைய மன அழுத்தம் கூடுமே ஒழிய நிச்சயம் குறையாது. இது மாதிரி நேரத்தில் முதலில் அம்மாக்களின் மன அழுத்தத்தை குணப்படுத்த சிகிச்சை அளித்தால் போதும். குழந்தைகள் தானாகவே நல்ல பிள்ளைகளாகி விடுவார்கள். அதாவது தாய்மார்களுக்கு அளிக்கும் சிகிச்சை, குழந்தைகளுக்கு மறைமுகமாக நல்லது செய்கிறது.
சில சமயம் மன அழுத்தம் என்பது பாரம்பரிய பிரச்சினையாக இருக்கலாம். அத்தகைய நிலையில் பிரச்சினையின் மூலத்தை அறிந்து கொண்டு அதற்கு சிகிச்சை அளித்தால் போதும். குழந்தைகளுக்கு தனியாக அளிக்கத் தேவையில்லை. தாய்மார்கள் எதற்கெடுத்தாலும் எரிந்து எரிந்து விழும் போது, அவர்களிடம் வளரும் குழந்தைகளின் நடத்தை மாறுவது ஆச்சரியமானது அல்லவே..!
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதிய ஆய்வு..., சிகிச்சை, குழந்தைகளுக்கு, Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி