முட்டாள் சிரிப்புகள் - இரவல் தர மாட்டேன்
புதுப் படம் வெளியாகி இருந்தது. திரை அரங்கம் முழுமையும் நிரம்பி இருந்தது. உயர் வகுப்பில் நாகரிகமான பெண்மணியின் பக்கத்தில் அழுக்கு உடை அணிந்த சிறுவன் ஒருவன் அமர்ந்து இருந்தான்.
அந்தப் பையன் ஓயாமல் இருமிக் கொண்டும் அருவருக்கத்தக்க முறையில் சளியைச் சுற்றுப்புறமெங்கும் சிந்திக் கொண்டும் இருந்தான்.
பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்த பெண்மணி அவனைப் பார்த்து, நீ கைக்குட்டை வைத்து இருக்கிறாயா? என்று கேட்டாள்.
வைத்து இருக்கிறேன், ஆனால் முன்பின் அறிமுகம் இல்லாத யாருக்கும் நான் அதை இரவல் தருவது இல்லை, என்றான் அவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரவல் தர மாட்டேன் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,