ஜென் கதைகள் - தலைசிறந்த படைப்பு
அழகாக எழுதுவதில் வல்லவரான குரு ஒருவர் ஒரு சிறு துண்டு காகிதத்தில் சில எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார். அதை அவரது சீடர்களில் துடிப்பான ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். குரு தனது எழுத்து வேலையை முடித்தவுடன் சீடனிடம் காட்டி அவரது கருத்தைக் கேட்டார். அதற்கு சீடனோ இது நன்றாகவே இல்லை என்று கூறிவிட்டான்.
உடனே குரு மறுபடியும் அதே எழுத்துக்களை எழுதினார். மீண்டும் சீடன் அதில் குறை கூறினான். இவ்வாறே சீடன் குறை கூறிக் கொண்டே இருக்க குரு மீண்டும் மீண்டும் எழுதினார். இறுதியாக சீடனின் கவனத்தை திசை திருப்பி அவனை வேறு பக்கம் பார்க்கச் செய்துவிட்டு வேக, வேகமாக எழுதி முடித்தார். சீடன் திரும்பிப் பார்த்துவிட்டு இது தான் தலைசிறந்த படைப்பு என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தலைசிறந்த படைப்பு - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - குரு, சீடன், மீண்டும்