முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை - 2
பஞ்ச தந்திரக் கதைகள் - 1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை - 2
நண்பா, நான் என்ன சொல்வேன்! என் மனைவியோ சாகும் நிலையில் இருக்கிறாளாம். வானரத்தின் ஈரல் கொடுத்தால்தான் அவள் பிழைப் பாளென்று மருத்துவர்கள் சொல்லுகிறார்களாம். அதற்கு நான் எங்கே போவேன்?’ என்று சொல்லி முதலைக் கண்ணிர் வடித்தது முதலை.
முதலையின் மன நோக்கத்தைக் குரங்கு புரிந்து கொண்டது. ‘பூ! இதற்குத்தானா இவ்வளவு கவலைப்படுகிறாய்? வானர ஈரல் எத்தனை வேண்டும்? நூறு வேண்டுமா?’ என்று கேட்டது.
அவ்வளவு வேண்டாம். ஒன்று இருந்தால் போதும்’ என்றது முதலை.
அதோ அந்த நீண்ட மரத்தின் கிளைகளில் வரிசையாக தொங்கிக் கொண்டிருக்கிறதே! முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கக் கூடாதா? இத்தனை தூரம் வந்த பிறகு சொல்கிறாயே! சரி, சரி, நண்பா திரும்பு. போய் ஈரல்களில் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டு, உன் மனைவிக்குக் கொடுக்கப் பழங் களும் பறித்துக் கொண்டு திரும்புவோம்’ என்று கூறியது குரங்கு.
முதலையும் அதன் சொல்லை நம்பி உடனே திரும்பி புறப்பட்ட கரைக்கே கொண்டு வந்து விட்டது. கரை நெருங்கியவுடன் ஒரே பாய்ச்சலாக : பாய்ந்து, மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது குரங்கு. .
மரத்தின் மேல் ஏறிய குரங்கு இறங்காததைக் கண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலை, நெடுநேரமான பின் நண்பா, ஈரலை எடுத்துக் கொண்டு விரைவில் வா!’ என்று அழைத்தது.
"ஏ முதலையே, இன்னும் ஆசை வைத்துக் கொண்டு ஏன் காத்துக் கொண்டிருக்கின்றாய்? பசி யோடிருப்பவனுடைய நட்பில் ஆசை வைத்தால், பாம்பை நண்பனாக்கிக் கொண்ட தவளையைப் போல் துன்பப்பட வேண்டித்தான் வரும். உனக்கும் எனக்கும் உள்ள நட்பு இத்தோடு போதும். இனியும் நான் ஏமாறுவேன் என்று எதிர் பார்க்காதே.
"பெண்கள் பேச்சுக்குக் காது கொடுத்தவர்கள் ஏளனத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீயோ உன் பெண்டாட்டிக்காக என்னைக் கொன்று விடவே நினைத்து விட்டாய். இது மிகவும் தீது.”
இவ்வாறு குரங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த முதலையொன்று, அரசி முதலை இறந்து விட்டது” என்று சொல்லியது.
தன் பிரிவால் தன் மனைவி இறந்து விட்ட செய்தியறிந்து முதலைக்குத் துக்கம் தாளவில்லை. அது குரங்கைப் பார்த்து, நான் ஒரு பாவி. அருமை மனைவியையும் இழந்தேன். உன்னைக் கொல்ல நினைத்து உன் அருமையான நட்பையும் இழந்தேன்’ என்று சொல்லி வருந்தியது.
என்னைக் கொல்லும்படி சொன்ன உன் மனைவி பொல்லாதவன், அப்படிப்பட்ட தீயவள் இறந்ததற்காக நீ இவ்வளவு துயரப்பட வேண்டாம், கவலையை விடு. உன் இருப்பிடத்திற்குப் போ’ என்று குரங்கு கூறியது.
முதலையரசன் தன் இருப்பிடத்திற்குப் போய்ப் பார்த்தது. அங்கு வேறொரு முதலையிருக்கக் கண்டு, திரும்பி வந்தது. குரங்கைப் பார்த்து என் இருப்பிடத்தில் வேறொரு முதலை வந்து இருந்து கொண்டு விட்டது. அதனை விரட்ட வழி சொல்ல வேண்டும்’ என்று கேட்டது.
‘தீயவர்களுக்கு வழி சொன்னால் தீமையே உண்டாகும்’ என்று குரங்கு கூறியது.
“நான் உனக்குத் தீமை நினைத்தவன் தான். இருந்தாலும் நீ என்னிடம் இரக்கம் காட்டி ஓர் யோசனை சொல்ல வேண்டும்?’ என்று முதலை கெஞ்சியது.
நேரே சென்று உன் பகைவனாகிய அந்த முதலையிடம் போர் செய், சண்டையில் ஒரு வேளை நீ தோற்றால் வீர சுவர்க்கம் கிடைக்கும். எப்போதும் உரிய இடத்தில் வாழ்வதே நன்மை உண்டாக்கும். புதிய இடத்திற்குப் போனால் அதனால் துன்பங்கள் பல ஏற்படும். ஆகையால், உன் இடத்தை நீ அடைவதே சிறந்தது. நியாயம் உன் பக்கம் இருப்பதால் உனக்கே வெற்றி ஏற்படும். போ’ என்று குரங்கு ஆலோசனை கூறியது.
முதலையரசன் தன் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு வந்து தங்கியிருந்த முதலையோடு போரிட்டு, அதைக் கொன்றது.
பிறகு அது தன் இடத்தில் இருந்து கொண்டு முதலைகளுக்கெல்லாம் ஓர் ஒப்பற்ற அரசனாக விளங்கிப் பல நாட்கள் இன்பமாக வாழ்ந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை - 2 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - குரங்கு, கொண்டு, முதலை, கூறியது, நான், வந்து, அங்கு, மரத்தின், நண்பா