முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 1. நான்கு நண்பர்கள் - 3
பஞ்ச தந்திரக் கதைகள் - 1. நான்கு நண்பர்கள் - 3
ஒரு நாள் ஆமை எலியை நோக்கி, உன் சொந்த ஊர் எது? உன்னுடைய வரலாறு என்ன? நீ இங்கு வரக் காரணம் என்ன என்று கேட்டது.
எலி தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கியது.
என்னுடைய சொந்த ஊர் சம்பகாவதி என்பது. அங்கே ஒரு மடத்தில் நான் இருந்து வந்தேன். அந்த மடம் ஒரு சைவத் துறவியுடையது. அந்தச் சைவத் துறவி நாள்தோறும் தெருவில் பிச்சை எடுத்து வந்து, தான் உண்டது போக மீதியை வேறு யாரேனும் பரதேசிகள் வந்தால் கொடுப்பதற்கென்று ஒரு சிறு பாத்திரத்தில் வைத்திருப்பான். அவன் மீத்து வைக்கும் சோற்றை இரவில் நான் வந்து வயிறு புடைக்கத் தின்பேன், அவன் கையில் அகப்படமாட்டேன். இப் படிப் பலநாட்கள் என்வாழ்க்கை இன்பமாக நடந்தது.
ஒரு நாள் அந்த சைவத்துறவியின் மடத்துக்கு இன்னொரு சந்நியாசி வந்திருந்தான். இருவரும் பல விதமான சாத்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே யிருந்தார்கள். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் பேச்சு முடிந்து தூங்கப் போவதாகத் தெரியவில்லை. எனக்குப் பசி பொறுக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் தூங்கும் முன்னாலேயே அந்தப் பாத்திரத்தில் இருந்த சோற்றைத் தின்னத் தொடங்கி னேன். நான் சோறு தின்னும் சத்தம் கேட்டு சைவத் துறவி அதட்டி என்னைத் துரத்தி விட்டான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றியிருக்கிறது.
தன்னோடு பேசாமல் ஏதோ நினைவாய் இருப்பதைக் கண்டு அங்கு அமர்ந்திருந்த சந்நியாசி அவனை நோக்கி, திடீர் என்று என்ன யோசனை?” என்று கேட்டான்.
“அந்த எலி குதித்தோடியதைப் பார்த்துத் தான் யோசனையில் ஆழ்ந்து விட்டேன். நான் தெருத் தெருவாகச் சுற்றிப் பிச்சை யெடுத்துக் கொண்டு வருகிற சோற்றை யெல்லாம் இது இங்கிருந்து கொண்டே தின்று கொழுத்துப் போய்விட்டது. எவ் வளவு வேகமாக அது குதித்துப் பாய்கிறது! அதைப் பிடிக்கக்கூட'முடியவில்லை. இப்படி மதமதப்பான அச்சமில்லாத எலியை நான், பார்த்ததேயில்லை’ என்று சைவத்துறவி கூறினான்.
‘இந்த எலி ஒன்றுதானா, இங்கு இன்னும் வேறு எலிகள் இருக்கின்றனவா?’ என்று வந்திருந்த சந்நியாசி கேட்டான்.
‘ஒன்றுதான்’ என்று சொன்னான் சைவத்துறவி.
“அப்படியானால், உன் சோற்றுப் பருக்கையினால் மட்டும் இது கொழுக்கவில்லை. இது கொழுத் திருப்பதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்த இடத்திலே நாம் மண்வெட்டியால் வெட்டிப் பார்க்க வேண்டும்’ என்றான். -
“ஏன்?” என்று சைவத்துறவி விவரம் புரியாமல் கேட்டான்.
“எவனிடத்தில் பொருள் இருக்கிறதோ, அவன் கொழுப்பாக இருக்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல, இந்த எலி இருக்குமிடத்தில் ஏதோ புதையல் இருக்க வேண்டும்’ என்று வந்திருந்த சந்நியாசி கூறினான்.
உடனே அவர்கள் எலி வளையிருந்த இடத்தை வெட்டத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கு அவர்களுக்குத் தங்கப் புதையல் கிடைத்தது. அவர் கள் அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். நான் பயந்து போய் வேறொரு வளையில் பதுங்கிக் கொண்டேன். மறுபடி பசியெடுத்த போது, நான் அங்கு சோறு தின்னப் போனேன். அந்தத் துறவி துரத்திக் கொண்டு வந்து என்னை அடித்து விட்டான். அன்று முதல் இன்றுவரை அந்த மடத் திற்குத் திரும்பிப் போகவே எனக்குப் பயமாக இருக்கிறது. இப்போது ஒர் ஆண்டாகக் காட்டில் தான் இருந்து வருகிறேன்.
‘அறிவும் கல்வியும் நன்மையும் பயனும், வன்மையும் இன்பமும் எல்லாம் பொருளினால்தான் உண்டாகின்றன.
“சுதியில்லாத பாட்டும், உறவினர் இல்லாத நாடும், அறிவில்லாதவர் கவிதையும், நல்ல மனைவி யில்லாத வீடும், கணவன் இல்லாத பெண்ணின் அழகும் வீண் பாழே! பொருள் இல்லாதவர்களுக்கு உலக வாழ்வே பாழ்!
கதிரவன் இல்லை யென்றால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் மறைந்து போகும். அது போல் பொருள் இல்லாதவர்களுக்கு எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.
அந்தச் சைவத்துறவி என்னை அடித்து விரட்டும் போது, தங்கப் புதையலின் மேல் இருந்து கொண்டு என் சோற்றைத் தின்று கொழுத்த எலியே, இப்போது உன் தங்கம் பறி போச்சே! இன்னும் உனக்கு வெட்கம் இல்லையா?” என்று கேட்டான். அது எனக்கு இன்னும் வேதனையாக இருக்கிறது. அந்த வேதனை நீங்க நீதான் ஒரு வழி சொல்ல வேண்டும். அதற்காகவே உன்னிடம் வந்து சேர்ந்தேன்’ என்று எலி கூறியது.
கவலைப்படாதே, இந்தக் காகத்திற்கு நீ ஒரு செல்வம் போல உற்ற நண்பனாகக் கிடைத்தாய். நீங்கள் இருவரும் என்னிடம் வந்து சேர்ந்ததே பெரும் பாக்கியம். நட்பாகிய பெரும் செல்வம் நம்மிடம் இருக்கிறது. அதை நமக்குக் கொடுத்த தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு நாம் நலமாக இருப்போம்’ என்று ஆமை கூறியது.
ஆமை குளத்திலிருந்து மீன்களைக் கொண்டு வரும். காகம் எங்கிருந்தாவது இறைச்சி கொண்டு வரும். எலி ஊருக்குள் போய்ச் சோறு கொண்டு வரும். மூன்றும் ஒன்றாகக் கூடியிருந்து கொண்டு, நாள் தோறும் உண்டு அன்புடன் பேசிக் காலம் கழித்திருக்கும்.
இப்படி அன்போடு அவை ஒன்றாக வாழும் நாளில் ஒரு நாள் ஒரு மான் ஓடி வந்தது. அந்த மான் நடுங்கிக் கொண்டே நின்று, மருண்டு மருண்டு விழித்தது.
‘சிறிதும் அறிவில்லாத நண்பனே, ஏன் நடுங்கு கின்றாய்? என்று அந்த மூன்று நண்பர்களும் கேட்டன.
‘யமனை யொத்த கொடிய வேடன் ஒருவன், நஞ்சு தோய்ந்த அம்பு கொண்டு என்னைக் கொன்று வீழ்த்த வந்தான். நான் அதற்குத் தப்பி ஓடி வந்தேன். இப்போது நான் உங்கள் அடைக்கலம், என்னை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அந்த மான் கூறியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. நான்கு நண்பர்கள் - 3 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - நான், கொண்டு, அந்த, வந்து, சந்நியாசி, நாள், சைவத்துறவி, கேட்டான், மான், இன்னும், பொருள், என்னை, கூறியது, இப்போது, இருக்கிறது, வரும், சோறு, சைவத், இருந்து, என்ன, துறவி, தான், கொண்டே, அவன், அங்கு