முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » எருதும் சிங்கமும் - 3
பஞ்ச தந்திரக் கதைகள் - எருதும் சிங்கமும் - 3
‘சரி, நான் இன்று அந்த எருதை இது பற்றிக் கேட்கிறேன்” என்றது சிங்கம்.
சரிதான், சரிதான்! இதைவிட வேறு என்ன ஆபத்து வேண்டும்? சூழ்ச்சிக்காரன் ஒருவனைப் பற்றிய யோசனைகளை மனத்தில் வைத்துக் கொள்ளாமல், அவனிடமே வாய்விட்டுச் சொன்னால் அதைவிட ஆபத்து வேறு என்ன வேண்டும்?
தனக்கென்று சிறப்பாக ஆசிரியர் கூறிய உபதேச மொழிகளையும், தன் மனைவியிடம் கண்ட இன்பத்தையும், தன்னிடம் இருக்கும் செல்வத்தை யும், தன் கல்வியையும், வயதையும், தான் செய்யும் தருமத்தையும், தன் ஆலோசனையையும் பிறர் அறியக் கூறக் கூடாது கூறினால், அதனால் ஏற்படும் பயன் அழிந்து போகும்’ என்று உபதேசம் புரிந்தது நரி. -
“என்னை அந்த மாடு என்ன செய்துவிட முடியும்?’ என்று சிங்கம் தன் வலிமையும் ஆங்காரமும் தோன்றக் கேட்டது.
அந்த மாட்டை நம்புவதே கூடாது. அதைப் பக்கத்தில் வைத்திருப்பதே சரியல்ல. அதை மேலும் கூட வைத்துக் கொண்டிருந்தீர்களானால் மூட்டைப் பூச்சியால் அழிந்த சீலைப் பேனைப் போல் அழிய நேரிடும்” என்று எச்சரித்தது நரி.
அந்த எருது என்னைக் கொல்ல நினைத்திருக்கிறது என்பதை நான் எப்படித் தெரிந்து கொள்வது?’ என்று சிங்கம் கேட்டது.
இப்போது அதைத் தெரிந்து கொள்ள முடியாது. அது வாலை முறுக்கிக் கொண்டு, கொம்பை அசைத்து எகிரிக் குதித்துப் பாய வரும் போதுதான் தெரியும்! அரசே, உங்கள் நன்மைக்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வாய்விட்டுச் சொல்லிவிடாமல் நீங்கள் எதற்கும் தயாராக இருங்கள். அந்த மாடு தங்களைப் பாயவரும்போது நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். பாயவரும் மாட்டை உயிர் பதைக்கப் பதைக்க வதைத்துக் கொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நரி சிங்கத்திடமிருந்து புறப்பட்டது. எருதைப் போய்க் கண்டது.
‘நரியப்பா, நலம் தானே?’ என்று நலங் கேட்டு வரவேற்றது எருது.
காளையரசே! இந்தச் சிங்க அரசனிடம் சேவை செய்து வாழ்பவர்களுக்கு நலம் எங்கிருந்து வரும்? பொல்லாத பாம்பு போல எப்போதும் கொலைத் தொழிலே குறியாய் வாழும் இந்தச் சிங்கத்தைச் சேர்ந்து விட்டோம். நமக்குக் கிடைக்கும் செல்வத் தால் அதன் பயன் கிடையாது. நாம் எண்ணுகின்ற ஏண்ணங்களாலும் ஏதும் பயனில்லை. நாம் எதைத் தான் அனுபவிக்க முடிகிறது?’ என்று நரி கேட்டது.
"நரியப்பா, மனத்தில் வஞ்சகம் இல்லாமல், மன்னன் மணமறிந்து நடந்து கொண்டால் துன்பமுண்டோ? எவ்வளவு கோபக்காரராக இருந்தாலும் நம்மிடம் அன்பாய் இருப்பார்களே! தங்கள் சுற்றத் தாரைப்போல நம்மையும் கருதி உயர்வு தருவார்களே!’ என்று எருது கூறியது.
காளை யரசே, செல்வத்தை யடைந்து அதனால் கிடைக்கும் இன்பத்தை அடையாதவர்கள் இல்லை. பெண்களின் இன்பத்தை யடைந்து அதனால் தங்கள் பலம் இழக்காமல் வாழ்ந்தவர்கள் இல்லை. கொடிய சாவுக்குத் தப்பி வாழ்ந்தவர்களும் இல்லை. அதுபோல் அரசர்கள் மனம் விரும்பும்படி நடக்கக் கூடியவர்களும் இந்த உலகத்தில் இல்லை.
‘தீயவர்களைச் சேர்ந்து நலமடைந்தவர்கள் யாருமே இல்லை. பிச்சைக்குப் போய் துன்பப்படாதவர்கள் ஒருவரும் இல்லை. களவுத் தொழிலினாலே பெருஞ் செல்வத்தை உண்டாக்கிக் கொண்டவர்கள் எவரும் இல்லை. அதுபோல பயமற்ற அரசர்களாலே வாழ்வு அழியாதவர்களும் யாருமே இல்லை.
‘நல்ல இடத்தை அடைந்து, தங்கள் நல்ல காலத்தினாலே, நல்ல பொருளை அடைந்து நல்ல தோழர்களைப் பெற்று, நடுக்கமில்லாத மனவுறுதி படைத்தவர்கள் சில நாள் இன்ப வாழ்வு வாழ் வார்கள். மற்றவர்கள் எப்போது எந்தக் கணத்தில் அழிவார்கள் என்று சொல்ல முடியாது’ என்று கூறி முடித்தது நரி.
‘நரியப்பா, இதெல்லாம் எதற்காகச் சொல்கிறாய். அரசர் உனக்கு என்ன கேடு நினைத்தார்?” என்று காளை கேட்டது.
‘அரசர் வஞ்சகமாய் நடந்து கொண்டாலும் அதை வெளியில் சொன்னால், சொல்பவர்களுக்குத் தான் அவமானம் உண்டாகும். இந்தச் செய்தி அரசனுக்குச் சிறிது தெரிந்தாலும் என்னைக் கொன்று விடுவான்?.
இருந்தாலும் நீயும் நானும் மனம் ஒன்றிய நண் பர்கள். ஆகையால்தான் சொல்கிறேன். நாளைக்குச் சிங்கமன்னன் தன் சேனைகளுக்கெல்லாம் ஒரு பெரிய விருந்து வைக்கப் போகிறான். அதற்கு உன்னைத்தான் கொன்று கூறு போட எண்ணியிருக்கிறான் என்று கூறி முடித்தது நீரி.
இதைக் கேட்டதும் அந்த எருதின் நெஞ்சு கலங்கியது. நரியப்பா, அரசன் என்னைக் கொல்ல நினைத்ததற்கு என்ன காரணம்?’ என்று நாக்குழறக் கேட்டது.
“இளைத்தவர்கள் மேல் எல்லாருக்குமே கோபம் வரும் என்பார்கள். கொடிய அரசர்களின் கோபத்திற்குக் காரணம் யாரால் அறிய முடியும்?
பரந்து கிடக்கும் கடலின் ஆழத்தை அளந்தாலும் அளக்கலாம்; உலகத்தின் சுற்றளவை அளந்தாலும் அளக்கலாம்; மலையின் உயரத்தை அளந்தாலும் அளக்கலாம்; பெண்களின் மனத்தை அளந்தாலும் அளக்கலாம்; தன்னிடம் வருபவர்களை இரைக்காகக் கொல்லும் இந்த அரசர்களின் மனத்தை யாராலும் அளக்க முடியாது.
மின்னல் கொடிபோன்ற பெண்களின் மனம் எப்போதும் காமுகரையே விரும்பி நிற்கும். பொன்னெல்லாம் உலோபிகள் சேர்த்து வைத்திருக்கும் பொருளோடுதான் போய்ச் சேரும். பெருமழையும் கடலிலே போய்த்தான் பெய்யும். அதுபோல், அரசர் களும் அருகதை இல்லாதவர்களைத்தான் விரும்பிக் கூடுவார்கள்.
ஏதாவது ஒரு காரணத்தால் அரசன் கோபம் கொண்டிருந்தால், வேறொரு காரணம் கூறி அவன் மனத்தைத் திருத்திவிட முடியும். காரணம் இல்லாமலே கோபம் கொண்டவனை எப்படி மனம் மாற்ற முடியும்? அன்று உன்னை அழைத்து வந்து அதிகாரம் கொடுத்தது சிங்கம். இன்று கொல்ல நினைக்கிறது. இதையெல்லாம் நினைத்தால் பாவமாயிருக்கிறது!’ என்று நரி இரக்க பாவத்துடன் பேசியது.
"துட்டர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்வதும், மூடர்களிடம் இனிய மொழி பேசுவதும், ஊமைக்கு உபதேசம் செய்வதும் நட்டமே தவிர ஒரு நன்மையும் இல்லை.
‘அறிவில்லாதவனுக்கு நல்லறிவு புகட்டுவதும், தீய அற்பர்களிடத்தும் தன் இல்லாமை கூறி இரப் பதும், துன்பமும் நோயும் தரும் பெண்களைக் காப் பதும், கல்லின்மேல் எறிந்த கண்ணாடி வளையல் போல் பயனின்றிக் கெடும்.
‘உப்பு மண் நிலத்தில் பெய்த மழையும், செவிடர் களுக்குச் செய்த உபதேசமும், தீயவர்களுக்குப் படைத்த சோறும் ஒன்றுதான்.
‘சந்தனமரக் காட்டிலும், தாமரைக் குளத்திலும், தாழைச் செடியிலும் பாம்பும் முதலையும் முள்ளும் சேர்வதுபோல் அரசர்களைத் துட்டர்கள் போய்ச் சூழ்ந்து கொள்வார்கள்.
ஆகவே நல்லறிவு படைத்தவர்கள், மன்னர் களிடம் போய்ச் சேர்ந்தால், அம்மன்னர்களை மன மாறுபாடடையச் செய்வதும், அவர்களைக் கொல்ல நினைப்பதும், சூதுகள் புரிவதும் துட்டர்களின் இயற்கை நீதியேயாகும்,’
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எருதும் சிங்கமும் - 3 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - இல்லை, அந்த, கேட்டது, என்ன, மனம், காரணம், அளக்கலாம், அளந்தாலும், கூறி, கொல்ல, சிங்கம், முடியும், மனத்தில், வைத்துக், கோபம், ஆபத்து, செய்வதும், போய்ச், நல்ல, பெண்களின், அதனால், என்னைக், எருது, வரும், இந்தச், தான், தங்கள், செல்வத்தை