கேள்வி எண் 71 - சட்டக்கேள்விகள் 100
71. நான் சிறுவனாக இருந்தபோது வாங்கமுடியாமல் போன நிவாரணத் தொகையை இப்பொழுது பெற முடியுமா?
ஐயா, எனது தகப்பனார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் Section Superintendent ஆக பணியிலிருந்து தமது 45வது வயதில் பணிக்காலத்தில் மரணமுற்றார். அவர் 27 வருடங்கள் பணியிலிருந்துள்ளார். நான் சிறுவயதினனாக இருந்ததால் பணிக்காலத்தில் மரண முற்றதற்கான அரசின் நிவாரணத்தொகையை என்னால் கேட்டுப் பெறமுடியவில்லை. தற்போது நிவாரணத் தொகை கேட்டு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு செய்து அலைந்ததுதான் மிச்சம். நான் இந்த நிவாரணத் தொகையைப் பெற தனிப்பட்ட முறையில் வழக்குரைஞரை வைத்து கோர்ட்டில் வழக்கு தொடரலாமா? என்பது பற்றி உங்கள் பதிலை விவரமாக தெரிவிக்கவும்.
- K.சிவராமன், வேலூர்.
பதில் :
உங்களுடைய ஆதங்கம் நியாயமானதுதான். நீங்கள் நீதி மன்றத்தை அணுகுவதன் மூலம் நிச்சயமாக உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 ன் மூலம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உங்கள் தந்தை பணிக்காலத்தில் இறந்ததற்கான நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புங்கள், அளிக்கப்படவில்லை என்று பதில் கிடைத்தால் ஏன் அளிக்கப்படவில்லை என்றும், தற்போது நீங்கள் அளித்த விண்ணப்பத்தின் நிலையினையும் கேட்டு மனுச் செய்யுங்கள். உங்களுக்கான உரிய நிவாரணம் விரைவில் உங்கள் வீடு தேடி வரும். அதற்கு மேல் வழக்கு தொடுக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துக்கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நிவாரணத், நான், நீங்கள், உங்கள், பணிக்காலத்தில், மூலம், அதற்கு, அளிக்கப்படவில்லை, பதில், நிவாரணம், சம்பந்தப்பட்ட, மாவட்ட, தற்போது, தொகை, கேட்டு, வழக்கு