கேள்வி எண் 64 - சட்டக்கேள்விகள் 100
64. தாத்தாவின் சொத்தில் பேத்திக்கு பங்கு உள்ளதா?
ஐயா, என் தோழி ஒருவரின் தாத்தாவின் பெயரில் ஒரு பூர்விக சொத்து உள்ளது. தாத்தா இறந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பாட்டி இப்போது இருக்கிறார். தாத்தாவிற்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள். இதில் மூத்த மகன் (தோழியின் பெரியப்பா) இறந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. அவரது மனைவி (மூத்த மருமகள்) இறந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். தாத்தாவின் மகன் வழி, மகள் வழி பேரன், பேத்திகள் உண்டு. தோழியின் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே, ஆண் பிள்ளைகள் கிடையாது. இரண்டு பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்ததில் தோழியின் தந்தை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டார். இப்போது அவர் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் அவருக்கு வயது 60, மேற்கொண்டு அவர் உழைக்க அவரது உடல் நிலை ஒத்துழைக்காத நிலையில் அவர் தனது தகப்பனாரின் சொத்துகளில் தனது பங்கை கேட்டிருக்கிறார். அந்த சொத்தில் இப்போது அவரது சகோதரர்கள் (தோழியின் சித்தப்பா, பாட்டி, பெரியப்பாவின் மகன்)வசிக்கின்றனர், அதனால் சொத்துக்களை விற்க அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இப்போது என் தோழி செய்யவேண்டியது என்ன? தாத்தாவின் சொத்துக்களில் பேத்திகளுக்கும் சமபங்கு உண்டு என்பது தானே சட்டம். தாத்தாவின் சொத்துகளை விற்க பாட்டி சம்மதம் தெரிவித்தும் தோழியின் சித்தப்பாவும், பெரியப்பா மகனும் மறுப்பு தெரிவிக்க உரிமை உண்டா? இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துதான் சொத்துக்களை பெறமுடியுமா? அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் விரைவில் வழக்கு முடிவுக்கு வருமா? அல்லது காலதாமதம் ஆகுமா? விரைவில் சொத்துகளை பெற ஏதே னும் மாற்று வழி இருக்கின்றதா? தயவு கூர்ந்து பதில்கள் விளக்கமாக கொடுக்கவும்..
- R.சந்தியா, சென்னை
பதில் :
இன்று நாட்டில் நடக்கும் சொத்துப் பிரச்சனைகளில் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ள பிரச்னையே இதுதான். நீங்கள் தெளிவாக கேட்டிருக்கும் இந்த கேள்விக்கான பதில் பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். சரி விஷயத்திற்கு வருகிறேன்..
தாத்தா சொத்து எனும்போது இரண்டு பிரிவாக வருகிறது. ஒன்று தாத்தாவின் பரம்பரையாக வந்த சொத்து (Ancestral Property). இரண்டாவது அவர் தன் சொந்த உழைப்பில் தேடிய சொத்து(Self Acquired Property). இந்த நிலையில் சமபங்கு தோழிக்கு உண்டா என்றால், Hindu Succession Act 2005 – Amendment ன் படி நிச்சயம் உண்டு. ஆனால் எவ்வளவு என்பதுதான் கேள்விக்குறி ஏனெனில் சமபங்கு என்பது, சொத்து பிரிவடையும்போது மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், பாட்டி. அதன்பின் அவர் களுடைய பிள்ளைகள் (உங்கள் தோழி உட்பட). இப்போது தோழியின் சகோதரிகள் தங்கள் பங்கிற்கு வந்தால்? ஆனாலும் மற்றவர்களுக்கு கிடைக்கும் சம பங்கு கிடைக்கும்.
இதிலிருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால், சொத்துக்களை விற்க அனைவரும் உடன்பட வேண்டும். பாட்டி மட்டும் போதாது. காரணம், பாட்டி ஒரு பங்குதாரர் மட்டுமே. சொத்தை விற்க அனைவரும் ஒன்றுபடாவிட்டால், வாங்குபவர் கூட தயங்குவார். இந்த நிலையில் மற்றவர்கள் விற்க மறுத்தால், நிச்சயமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இதன் மூலம் உங்கள் தோழியின் பங்கைப் பெற முடியும். அதே சமயம் இது சொத்து சம்பந்தமான சிவில் வழக்கு (Property Related Civil Case) என்பதால் வழக்கின் கால தாமதத்தையும் நீங்கள் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். நீதிமன்றத்திற்கு செல்லும் முன்னர், நீங்கள் ஒரு நல்ல சிவில் வழக்குரைஞர் உதவியை நாடலாம். அவர்கள் சொத்தை விற்க மறுத்தால், உங்கள் தோழியின் பங்கிற்கு உரிய பணத்தை அல்லது அதற்கு சமமாக ஏதோ ஒரு வழியில் சரி செய்யும்படி கேட்கலாம். மறுத்தால், Partition Deed அல்லது Family Settlement Deed ஒன்றை உருவாக்கிக் கொண்டால், சுலபமாக உங்கள் பங்கை சுயமாக விற்க முடியும். இதன் மூலம் வழக்குரைஞர் மற்றும் நீதிமன்ற செலவுகள் கணிசமாக குறையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தோழியின், விற்க, இரண்டு, இப்போது, பாட்டி, தாத்தாவின், சொத்து, வழக்கு, அவர், உங்கள், சமபங்கு, அவரது, உண்டு, மறுத்தால், பிள்ளைகள், நிலையில், முடியும், இறந்து, தோழி, அல்லது, மகன், மூன்று, சொத்துக்களை, property, நீங்கள், பெரிய, பங்கிற்கு, வேண்டும், சிவில், வழக்குரைஞர், deed, மூலம், இதன், அனைவரும், பதில், சொத்தை, கிடைக்கும், பங்கை, மகள்கள், மூத்த, பெரியப்பா, மகன்கள், தாத்தா, சொத்தில், பங்கு, வருடங்கள், ஆகிவிட்டன, சொத்துகளை, உண்டா, என்பது, மறுப்பு, மட்டுமே, தனது, விரைவில்