கேள்வி எண் 63 - சட்டக்கேள்விகள் 100
63. நான் NRI ஒருவரை திருமணம் செய்து 22 நாட்களில் பிரிந்துவிட்டோம். நான் பராமரிப்பு செலவு கோரி வழக்கு தொடுக்க முடியுமா?
வழக்கறிஞர் திரு.குணசேகரன் அவர்களுக்கு வணக்கம். நான் சென்னை திருநின்றவூரில் வசிக்கிறேன். எனக்கும், வெளிநாட்டினைச் சேர்ந்த (Singapore) நபருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் வெறும் 22 தினங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தோம். அதுவும் நாங்கள் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு எதுவும் இல்லை. தற்போது அவர் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று கூறுகிறார். நான் அவரிடமிருந்து பராமரிப்பு கோரி வழக்கு தொடர முடியுமா -?
- K.பரிமளா, திருநின்றவூர்.
பதில் :
உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற காரணத்தால் நீங்கள் அவருடைய சட்டரீதியான மனைவி என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்கு காலவரையறை எல்லாம் கிடையாது. ஆகையால் நீங்கள் தாராளமாக உங்கள் கணவரிடம் பராமரிப்பு கோரி (Maintenance) மனுச் செய்யலாம் அதே நேரத்தில் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act -2005) ன் மூலம் உங்களின் மனவுளைச்சலுக்கான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடியும். நீங்கள் ஒரு நல்ல குடும்ப நல வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் இவற்றை எளிதில் அடையலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நான், நீங்கள், கோரி, வழக்கு, திருமணம், பராமரிப்பு, மூலம், குடும்ப, உங்கள், நாங்கள், முடியுமா, சேர்ந்து, இல்லை, தொடர