கேள்வி எண் 60 - சட்டக்கேள்விகள் 100
60. எனக்கும், என் கணவருக்கும் சரிபாதியாக கொடுத்த சொத்தினை விற்று எனக்குத் தராமல் அவர் பெயரில் சொத்து வாங்கிவிட்டார். இதற்கு என்ன தீர்வு?
ஐயா எனக்கு அறுபத்தொன்று வயது ஆகிறது. எனது கணவர் என்னிடம் இருந்து பிரிந்து வேறு ஒரு வீட்டில் தனியாக வாழ்கிறார். செல்லும்போது எங்களுடைய சொத்து சம்மந்தமான அனைத்து பத்திரங்களையும் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். அந்த சொத்தானது ஒரு கட்டத்தில் எனது மாமனார் எங்கள் இருவருக்கும் சரி பாதியாக உயில் எழுதி வைத்தது. அந்த சொத்தினை எனது கணவர் விற்று வேறு ஒரு சொத்தை அவரது பெயரிலேயே வாங்கிக் கொண்டார். மேலும் அரசாங்கத்தின் மூலம் வரும் பென்ஷன் தொகையையும் பெற்றுக் கொள்கிறார். இதுவரை என்னுடைய வாழ்வாதாரத்திற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு வழி கூறவும்.
- M.லோகநாயகி, சிதம்பரம்.
பதில் :
உங்கள் மனஉளைச்சலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வயதில் உங்களுக்கு இப்படி நேர்ந்திருக்க வேண்டாம். நீங்கள் உங்கள் மாமனார் எழுதிய உயிலின் பிரதியை வைத்து தற்போது உங்கள் கணவரின் வசத்தில் உள்ள சொத்திற்கு பாகப் பிரிவினை கோர சட்டத்தில் இடமுள்ளது. அது மட்டுமல்லாமல் உடனடி தீர்வாக உங்கள் கணவர் வசமுள்ள சொத்தின் வாடகை மதிப்பில் பாதித் தொகையினை(50%) பெறமுடியும். நீங்கள் ஒரு சிறந்த சிவில் வழக்குரைஞரை அணுகுவதன் மூலம் இவை அனைத்தையும் எளிதில் பெறமுடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், எனது, கணவர், மூலம், மாமனார், நீங்கள், பெறமுடியும், வேறு, விற்று, சொத்து, எனக்கு, சொத்தினை, அந்த