கேள்வி எண் 46 - சட்டக்கேள்விகள் 100
46. பூர்வீக சொத்தை விற்று அதன்பின் வாங்கிய வீட்டு மனையை என் பெயருக்கு உயில் எழுதி வைத்து விட்டார் என் தந்தை. என் தம்பிக்கு சொத்தில் உரிமை உண்டா?
என் தந்தை பூர்வீக விவசாய பூமியை விற்று டவுனில் வீடுகட்டியுள்ளார். சில வீட்டுமனைகளையும் வாங்கியுள்ளார். வீட்டை என் பெயருக்கு உயில் எழுதிவைத்துவிட்டார். வீட்டு மனைகளை விற்று மகனுக்கு ரொக்கமாக பணத்தை கொடுத்து விட்டார். பின்னாளில் தந்தைக்குப் பிறகு எனக்கு சொந்தமாகும் வீட்டில் மகனுக்கு பாத்தியதை உண்டா? சட்டப்படி எனக்கு முழுவதும் சேருமா? அல்லது வீட்டில் தம்பிக்கு உரிமை உண்டா?
- R.காயத்ரி, திருச்சி
பதில் :
யாருக்கு உரிய பாத்தியதை என்பது உங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட உயிலில் இருக்கும் ஷரத்துக்களின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்க இயலும். ஒருவேளை உங்கள் சகோதரருக்கு சேரவேண்டிய பாத்தியதை பணமாகக் கொடுக்கப்பட்டிருப்பதை உயிலில் மேற்கோள் காட்டியிருக்கும் பட்சத்தில் அவரால் உங்கள் தந்தை உயில் மூலமாக எழுதிவைத்த சொத்தில் பாத்தியதை கோர முடியாது. அப்படி இல்லையெனில், உங்கள் சகோதரருக்கு சொத்தை விற்று பணமாக கொடுக்கப்பட்டுவிட்டது என்பதை நீதிமன்றத்தின்முன் நிரூபணம் செய்ய வேண்டியது உங்கள் கடமை. அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு அமையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, பாத்தியதை, உங்கள், விற்று, தந்தை, உண்டா, உயில், மகனுக்கு, எனக்கு, வீட்டில், சகோதரருக்கு, உயிலில், சொத்தில், வீட்டு, சொத்தை, பெயருக்கு, விட்டார், பூர்வீக, தம்பிக்கு, உரிமை