கேள்வி எண் 15 - சட்டக்கேள்விகள் 100
15. எனது அம்மா இறந்தபின், அவருடைய சொத்தில் எனது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பங்குண்டா?
என் அம்மா இறந்து இரண்டு வருடங்கள் கழித்து என் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். என் அம்மா பெயரில் சொத்து உள்ளது. எனக்கு 15 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். இப்போது சொத்துக்களில் எங்கள் இருவருக்கு மட்டும் உரிமையா? அல்லது அப்பாவுக்கோ, அவரின் இரண்டாவது மனைவிக்கோ, குழந்தைக்கோ உரிமை உண்டா? எங்களுக்கு அதில் விருப்பமில்லை.
- C.கருப்பசாமி, திருநெல்வேலி
பதில் :
நல்ல கேள்வி. குழப்பமே வேண்டாம், உங்கள் அம்மாவின் சொத்திற்கு நீங்கள், உங்கள் 15 வயது தம்பி, மற்றும் உங்கள் தந்தை ஆகிய 3 நபர்கள் மட்டுமே உரிமை கோர முடியும். உங்கள் தந்தைக்கு சேரும் பாகத்தினை வேண்டுமானால் அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்.
மேலும் உங்கள் தந்தையின் காலத்திற்கு பிறகு அதுவும் அவர் உயில் எழுதாமலோ அல்லது சொத்து மாற்றமோ செய்யா திருக்கும் பட்சத்தில் உங்கள் தந்தைக்கு கிடைக்கப்பெற்ற பாகத்தில் அவருடைய இரண்டாவது மனைவியும், அவரது குழந்தைகளும் உரிமை கோர முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், உரிமை, அம்மா, இரண்டாவது, முடியும், தந்தைக்கு, அவர், தம்பி, அவருடைய, தந்தையின், சொத்து, எனது, அல்லது