ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்
பாலி
ஆறாம் நூற்றாண்டில் பாலி இந்து அரசு குலங்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏழாம் நூற்றாண்டில் அங்கு புத்த சமயம் பரவியிருந்தது என இட்சிங் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் இந்தியர்கள் அங்கு சென்று குடியேறியதைக் குறிப்பிடுகின்றன. பின்னர் பாலி ஜாவா அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இன்றும்கூட பாலியின் மக்கள் இந்துக்களாகவே திகழ்கின்றனர். ஜாதிமுறையும் பின்பற்றப் பட்டுவருகிறது.
மியான்மர்
தற்போது மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு அசோகர் காலத்திலிருந்தே தொடங்குகிறது. புத்த சமயத்தைப் பரப்புவதற்காக அசோகர் பர்மாவிற்கு குழுக்களை அனுப்பிவைத்தார். பர்மாவில் பல இந்து அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பாலியும், வடமொழியும் பர்மாவின் மொழிகளாக இருந்தன. பர்மிய மக்கள் மகாயான, ஹீனயான புத்த சமயப் பிரிவுகளை பின்பற்றினர்.
மலேயத் தீபகற்பம், இந்தோ-சீனா ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இந்து அரசர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். இந்திய சமயங்களும் பண்பாடும் அங்கு வாழ்ந்த மக்களிடையே பரவி நாகரிகத்தின் உச்சிக்கு அவர்களை இட்டுச் சென்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல் , வரலாறு, ஜாவா, இந்திய, அங்கு, பாலி, ஆசிய, புத்த, நாடுகளில், நூற்றாண்டில், பண்பாடு, இந்தியப், இந்து, பரவுதல், மியான்மர், அசோகர், வந்தது, மக்கள், ஜாவாவில், இந்தியா, அரசு, இன்றும், மக்களிடையே, கட்டுப்பாட்டில்