பதினாறு மகாஜனபதங்கள்
அஜாத சத்ருவின் ஆட்சி படையெடுப்புகளுக்கு பெயர் பெற்றதாகும். கோசலம், வைசாலி ஆகிய அரசுகளுக்கெதிராக அவர் போரிட்டார். லைசாலியைச் சேர்ந்த லிச்சாவிகள் தலைமையிலான மாபெரும் கூட்டிணைவை எதிர்த்து பெரும் வெற்றி கண்டார். இதனால், அவரது புகழும் பெருமையும் அதிகரித்தன. இப்போர் பதினாறு ஆண்டுகள் நீடித்தது. இப்போரின் போதுதான் அஜாதசத்ரு பாடலிகிராமம் (பிற்காலத்தில் பாடலிபுத்திரம்) என்ற சிறு கிராமத்தின் ராணுவ முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்தார். வைசாலிக்கெதிரான படையெடுப்புகளுக்காக அங்கு கோட்டைகள் அமைத்து வலிமையை பெருக்கிக் கொண்டார்.
அஜாதசத்ரு |
அஜாதசத்ருவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் உதயின். கங்கை நதியுடன் சோன் ஆறு கலக்குமிடத்தில் பாடலிபுத்திரம் என்ற புதிய தலைநகரை அவர் நிர்மாணித்தார். பின்னர், மௌரியப் பேரரசின் தலைநகராக பாடலிபுத்திரம் புகழ்பெற்றது. உதயினுக்குப் பின் வந்தோர் வலிமை குறைந்தவர்கள். எனவே மகதம் சிசுநாகர்களால் கைப்பற்றப்பட்டது. ஹர்யாங்கவம்சம் முடிவுக்கு வந்து சிசுநாகவம்சம் ஆட்சிக்கு வந்தது.
சிசுநாக வம்சம்
சிசுநாகர்களின் வம்சாவளியும், காலக்கணிப்பும் தெளிவாக இல்லை. அவந்தி நாட்டு அரசனை முறியடித்த சிசுநாகன் அதனை மகதத்துடன் இணைத்துக் கொண்டார். சிசுநாகனுக்குப் பிறகு மகதப் பேரரசு சீர்குலையத் தொடங்கியது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் காகவர்மன் அல்லது காலசோகன் என்பவர். இவரது ஆட்சிக்காலத்தில் வைசாலியில் இரண்டாவது புத்த சமய மாநாடு கூடியது. நந்தவம்சத்தை நிறுவியவரால் காலசோகன் கொல்லப்பட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறு மகாஜனபதங்கள் , அவர், வரலாறு, பதினாறு, இந்திய, பாடலிபுத்திரம், புத்த, ஆட்சிக்கு, அஜாதசத்ரு, மகாஜனபதங்கள், தொடர்ந்து, காலசோகன், வந்தவர், மாநாடு, கொண்டார், சிறு, இந்தியா, பின்னர், என்றும், பிறகு